மதுரை, ஏப்.10- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசா ரணைக்காக அழைத்து செல்லப் பட்டவர்களின் பற்களை பிடுங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் செய்த சித்ரவதைகளை விசாரிக்க தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதாவை நிய மித்துள்ளது. அவர் திருநெல்வேலி மாவட்டம் உள்ள அம்பாசமுத்தி ரம் தாலுகா அலுவலகத்தில் திங் கள்கிழமை தனது விசாரணை யைத் தொடங்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய அம்பாசமுத்திரம் காவல்துறை சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி, தலைமைக் காவலர் வின்சென்ட் ஆகிய இருவர் மட்டுமே விசா ரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். சிங்கம்பட்டியைச் சேர்ந்த எஸ்.பூதப்பாண்டி, விசாரணை அதி காரி முன் ஆஜராகி இரண்டு ஆண்டு களுக்கு முன் புகாரளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றபோது கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் தன் மீது வழக்குப் பதிவு செய்துவிடு வதாக மிரட்டினார். இது தொடர் பாக பல்வீர் சிங்கிடம் புகார் அளித்தேன் எனக் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையையும் உரிய அதிகாரியிடம் தெரிவிப்பதாக அவர் பூதப்பாண்டியிடம் உறுதி யளித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையையொட்டி வரு வாய்த்துறை அலுவலகத்திற்கு மற்ற தேவைகளுக்காக வரும் மக் கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக் கிழமை வந்த அமுதா, இந்த சம்ப வத்தை விசாரித்த ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம் ஆகியோரிடமிருந்து அறிக்கை களைப் பெற்றுக் கொண்டார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான பிறகு, பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முஹமது ஷபீர் ஆலம் முன் வாக்கு மூலம் பதிவு செய்தனர். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள். மாறாக நீதிமன்றத்தை அணுகி நியா யம் பெறுவார்கள் என்றார் வழக்க றிஞர் மகாராஜன். மேலும் அவர் கூறுகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவல்துறையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் கல்லிடைக்குறிச்சி, அம்பா சமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட் டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
விசாரணைக்கு வந்தவர் களின் பற்களைப் பிடுங்கிய சம்ப வத்தில் கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் பல்வீர்சிங், மார்ச் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து காவல்துறைச் சேர்ந்த ராஜ்குமார், போகபூமன், சந்திர சேகரன், பி.ராஜகுமாரி, ஏ.பெரு மாள், என்.சக்தி நடராஜன், எம்.சந் தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதி சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர களுக்கு நீதி கிடைப்பதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாது காப்பு வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ. எம்.எல், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமையில் ஏப்.2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.