districts

img

டீச்சருக்கு பட்ட கடனை சாகும் வரை மறக்க மாட்டேன்

பிறந்து பதினைந்து நாட்களே ஆன குழந்தையின் உயிரைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நாட்களில் வடகரை ஓர்கட்டேரி  பைத்துனூரில் கே.வி.சஜினாவுக்கு முதலில் ஆறுதல் வார்த்தைகளை கூறியவர் சைலஜா டீச்சர். அன்று இதய வால்வு செயலிழந்து மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தை யுடன் சுகாதாரத்துறை அமைச்ச ராக இருந்த டீச்சர் இருந்தார். ‘ஹிருத்யம்’ திட்டத்தின் கீழ்  எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிஷான் அகமது இன்று மகிழ்ச்சி யுடன் இருக்கிறார்.  சஜினாவும் அவரது மகனும் கூத்துபரம்பில் ஓட்டு கேட்டு வந்த டீச்சரை சந்  தித்தனர். இந்த சந்திப்பு உணர்வுப்  பூர்வமாக இருந்தது. டீச்சரை சஜினா கட்டிப்பிடித்து கை கூப்பினார்: ‘இந்த மகனை எங்களுக்கு திருப்பி கொடுத்தது டீச்சர் தான், எங்களுக்கு தீராத கடன் இருக்கு... சாகும் வரை மறக்க மாட்டேன்.’என்றார்.