மதுரை, பிப்.20- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு அவர் படித்த திருநகர் முத்துதேவர் முக்குலத் தோர் பள்ளியின் சார்பில் மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது. மதுரை திருநகரில் உள்ள முத்து தேவர் முக்குலத்தோர் மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் நிறு வனர் கே.முத்துதேவர் அவர்களின் 128வது ஜெயந்தி விழா, நிறுவன ரின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா, பள்ளியின் 66ஆம் ஆண்டு விழாவும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டு விழா, மாமனிதர் விருது வழங்கும் விழா என அறும் பெரும் விழா பிப்ரவரி 20 திங்க ளன்று பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்று, பள்ளியின் புதிய கட்டி டத்தை திறந்து வைத்து அஞ்சல் தலையை வெளியிட்டார். விழாவில் தலைவர் கே.சரவ ணன், செயலாளர் ஆர்.கண்ணன், பள்ளி இயக்குநர் நடனகுரு நாதன், பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஆனந்த் ,கமலா வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் , பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் கள் கலந்து கொண்டனர். முன்ன தாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு பள்ளியின் சார்பில் ‘மாமனி தர்’ விருது வழங்கி கெளரவிக்கப் பட்டார். பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி. உரையாற்றினார். அவர் பேசிய தாவது: இந்நாள் மிகுந்த மகிழ்ச்சியான ஒரு நாள். பெரும் மரியாதைக்கு ரிய முத்துதேவர் அவர்களின் கல்விப்பணியால் கிடைத்த பலன் கள் எத்தனையோ உள்ளன. எனது தந்தையார் காலத்தில் பசுமலை யில் தான் பள்ளிக்கூடம் இருந்தது.
1950-க்குப் பின்னர் இப்பள்ளி யினை துவக்கினர். அதன் பிறகு 30 ஆண்டுகள் முத்துதேவர் முக் குலத்தோர் பள்ளியை தவிர இந்த பகுதியில் பிற பள்ளியே கிடை யாது. ஒரு வேலை இந்த பள்ளி துவங்கவில்லை என்றால் பசுமலை யில் உள்ள பள்ளிக்குத்தான் சென்றி ருக்க வேண்டும். பசுமலை பள்ளிக் குச் சென்றுதான் படிக்க வேண்டும் என்றால் மூன்றில் ஒரு பங்கு மாண வர்களுக்கு கல்வி வாய்ப்பு இல்லா மல் போயிருக்கும். என்னை நூறு சதவீதம் வடிவமைத்தது முத்து தேவர் முக்குலத்தோர் மேல் நிலைப் பள்ளிதான் என்பதை நான் எல்லா இடங்களிலும் சொல்லு வேன். இங்கு பேச்சுப்போட்டியில் ஒரு மாணவர் சிறப்பாக பேசி னார். மாணவருக்கும் அவருக்கு எழுதிக்கொடுத்த ஆசிரியருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இதே போல தான் எனக்கு பேச்சுப் போட்டிக்காக முதன் முதலில் எழுதிக் கொடுத் தது பேரறிஞர் புலவர் ஐயா இரா.இளங்குமரனார் அவர்கள்/ நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவர் எழுதி கொடுத்ததைத்தான் முதன் முதலில் நான் பேசினேன். மிகப்பெரிய அறிஞர் ஒருவரால் பேச்சுப் போட்டிக்கு எழுதிக் கொடுக்க வாய்ப்பு கிடைத்த ஒரு மாணவன் நான். கல்வி இரண்டு விஷயங்க ளைச் செய்யும்.ஒன்று, தன்னம்பிக் கையை உருவாக்கும். மற்றொன்று படைப்பாற்றலை உருவாக்கும். இந்தப் பள்ளி படைப்பாற்றலை உருவாக்கக்கூடிய பள்ளி. கற்பனை வளத்தையும் கல்வி வளத்தையும் உருவாக்குவதில் என்றைக்கும் இந்த பள்ளி பின் தங்கி பள்ளியாக இருந்ததே இல்லை என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன். எங்க ளைப் போன்றவர்களை உரு வாக்கியதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பள்ளி யின் உடைய ஆசிரிய சூழல், கல்வி சூழல், மாணவர்கள் சூழல் , நண்பர் களால் தான் முடிந்தது. ஒரு ஆசி ரியர்களுடைய இடம் என்னவென் றால் மாணவர்களுக்கு படைப் பாற்றலை கல்வி வளத்தை, தன்னம் பிக்கையை, கற்பனை வளத்தை ஊக்கப்படுத்துகிற வேலையை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். நிச்சயமாக நம்முடைய பள்ளி இதனை செய்ததன் ஒரு அடையா ளம் தான். என்னைப் போன்ற மாணவர்கள் அந்த அடையா ளத்தை தொடர்ந்து செய்ய வேண் டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.