districts

தேனியில் வீட்டுத்தோட்ட செடிகள் கண்காட்சி- விற்பனை மேளா

தேனி , ஜூன் 23-  பெரியகுளம் தோட்டக் கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் “வீட்டுத் தோட்ட செடிகள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவினை’’   தேனி ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் புதிய முன்னெ டுப்புகளான மாடித்தோட்டத்தில்  ஹைட்ரோபோனிக்ஸ், வீட்டிற்கு ஒரு  தேனீ பெட்டி மற்றும் காய்கறி சிற்பம் செய்தல் (Vegetable Carving) போன்றவை  குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்த விற்பனை மற்றும் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை தொடங்கி ,சனி ,ஞாயிறு கிழமைகளில்  காலை 11  மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. பள்ளி மாணவ ,மாணவியர்கள் தங்களது பள்ளி மற்றும் வீடுகளில் மூலிகைச் செடிகள் வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களை சேர்ந்த பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர்களுக்கு மூலிகைச் செடிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர்  இராஜாங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) பொ.தன லெட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.