districts

img

மலை கிராமங்களுக்கு ரேசன் அரிசி எடுத்து செல்ல தடை

கடமலைக்குண்டு, ஏப்.16- தேனி மாவட்டம், கட மலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதி யில் மஞ்சனூத்து, இந்திரா நகர், அரசரடி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்  ளது. மாதத்தில் 2 முறை  ரேசன் கடை பணியாளர்கள் லாரியில் அரிசி மூட்டை களை ஏற்றிக்கொண்டு விநி யோகம் செய்து வருகின்ற னர். வியாழக்கிழமை வழக்  கம் போல மலை கிராமங்க ளுக்கு லாரியில் அரிசி மூட்  டைகள் ஏற்றி செல்லப்பட் டது. அப்போது மஞ்சனூத்து சோதனை சாவடியில் லாரி யை தடுத்து நிறுத்தினர்.  பின்பு வனத்துறையினர் உயர் அதிகாரிகளின் அனு மதியின்றி மலை கிராமங்க ளுக்கு செல்லக்கூடாது என  ரேசன் கடை பணியாளர்களி டம் தெரிவித்தனர்.  இதையறிந்த மஞ்ச னூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் மஞ்சனூத்து சோதனை சாவடிக்கு வந்து வனத்துறை பணியாளர்களி டம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்த மேக மலை வனச்சரகர் அஜய்  லாரியை மலை கிராமங்க ளுக்கு செல்ல அனுமதி வழங்கினார். மேலும் வரும் நாட்களில் முறையான அனு மதி பெற்றால் மட்டுமே ரேசன் லாரியை மலைக்கிரா மங்களுக்கு செல்ல அனு மதிக்கப்படும் என தெரிவித் தார்.  ஏற்கனவே மலை கிராம  பொதுமக்களை வனப்பகு தியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது முக்  கிய வாழ்வாதாரமாக உள்ள ரேஷன் அரிசியை வனத் துறையினர் தடுத்து நிறுத்தி யுள்ளனர். இதனால் மலைக் கிராம மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந் தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.