districts

தேனியில் விடிய விடிய மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி ,நவ.12- வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகள், அருவி களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  கன மழை எச்சரிக்கையும் விடப்பட்டது. இடை விடாது பெய்து வரும் மழை காரண மாக  வைகை ஆறு, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் 69.55 அடியாக உள்ளது. அணைக்கு 1,012 கன அடி நீர் வந்தது.1,269 கன அடி நீர் திறக்கப்பட்டது. கன மழை  அடுத்த  இரண்டு நாட்களுக்கும் தொடரும்.

இதனால் எந்த நேரமும் வைகை அணை யின் நீர்மட்டம் 70 அடியை எட்டும் என்ப தால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மதகு, கரைகளைக் கண்காணித்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. 816 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வந்த  நிலையில் 40 கன அடி நீர் திறக்கப் பட்டது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.48 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வந்தது. 30 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  குரங்கணி வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  மழையளவு ; தேக்கடி 0.4, கூடலூர் 7.4, உத்தம பாளையம் 1.2, போடி 36.8, வைகை அணை 18.6, மஞ்சளாறு 35, சோத்துப் பாறை 10, பெரியகுளம் 31, வீர பாண்டி 48.8, அரண்மனைபுதூர் 43.6,  ஆண்டிபட்டி 27.2, சண்முகநாதி அணை 28.6 மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.