திருவில்லிபுத்தூர், ஜன.4- திருவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் ஜனவரி 3 அன்று சொர்க்கவாசல் திறக் கப்பட்டது. ஏராளமானோர் வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர், ரகு பட்டர் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் மணியம், கோபி வேதபிரான் சுதர்சன் மணியம் ஸ்ரீ ராமன் ஆகியோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். விழாவில் சடகோபர் ராமானுஜ ஜியர் சுவாமி கள், தக்கார் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.