தேனி, செப்.20- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் காப்பீட்டு திட்ட நலச் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் கவன ஈர்ப்புப் போராட் டம் நடைபெற்றது. தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முன்பு சங்கப் பொருளா ளர் ராஜ்மோகன் தலைமை யில் போராட்டம் நடைபெற் றது. அப்போது “ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219-ஐ ரத்துச் செய்து, ஊதியப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நியாயமான அடிப்படை ஊதிய உயர்வை நிர்ண யிக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் பணியா ளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.