குடும்ப தலைவிகளின் அடிவயிற்றில் நெருப்பை எரியவைத்த மோடி அரசு சு.வெங்கடேசன் எம்.பி.,சாடல்
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி.,செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு நல்ல ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிற இந்த நாளில். பொது சுகா தார திருவிழாவை இன்றைக்கு மேலூர் தாலுகா திருவாதவூரில் கொண்டாடிக் கொண்டிருப்பது மிகப் பொருத்தமானது. தற்போது வீட்டில் எரிய வேண்டிய நெருப்பு, ஒவ்வொரு வீட்டி னுடைய குடும்பத்தலைவி மற்றும் தலைவர்களுடைய அடி வயிற்றிலே எரிகின்ற நெருப்பாக ஒன்றிய அரசு மாற்றிக் கொண்டி ருக்கிறது. மிகக் கொடுமையான இந்த விலை உயர்வுக்கு எதி ராக மிகப்பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தினால் மட்டும் தான் மோடி அரசினுடைய இந்த விலைவாசி மற்றும் சமையல் எரி வாயு விலை உயர்வை பின்னுக்கு தள்ள முடியும். எனவே பெரும் போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை, மே 7- மதுரை மேலூர் வட்டம் திருவாதவூ ரில் உள்ள லெட்சுமி மெட்ரிக் பள்ளியில் சுகாதார திருவிழா சனிகிழமையன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் துவக்கி வைத்து தமிழக அரசின் சுகாதார திட்டங்கள் பற்றி உரை யாற்றினார். மதுரை மாவட்ட சுகாதார துறை இயக்குநர் மரு. செந்தில் குமார் வரவேற்று பேசினார். இந்த முகாமில் 88 கர்ப்பிணி பெண்க ளுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 26 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 29 நபர்களுக்கும் மேலும் முகாமில் கலந்து கொண்ட 350 நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் சிறு நீர் பரிசோதனை சளி பரி சோதனையும் செய்யபட்டது. 5 நபர் களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். முகாமில் மேலூர் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவர் கே.பொன்னுச்சாமி, ஏ.வள்ளாலபட்டி பேரூராட்சி தலைவர் குமரன், திருவாதவூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எம். இளசவரசன், துணைத் தலைவர் கே.எம்.சிக்கந்தர், ஒன்றியக் கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளையன், டி. வள்ளாலபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி லட்சுமி, தனியார் பள்ளி தாளாளர் ஞானசம்பந்தமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.மணவாளன், வி.அடக்கிவீரணன், பி.எஸ்.ராஜாமணி, ஏ.தனசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். திவாதவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கார்த்திக் குமார், ராஜா ஆகியோர் தலைமையிக் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்த னர். முகாம் ஏற்பாட்டினை மாவட்ட சுகா தார முத்துவேல் வட்டார சுகாதார மேற்பார் வையாளர் ஜாபர், சுகாதார ஆய்வாளர் தண்டியப்பன் ஆகியோர் செய்து இருந்த னர். வட்டார மருத்துவ அலுவலர் சிவ னேஷ் நன்றி கூறினார்.