திருநெல்வேலி, ஜூலை 29- அரிசி ,தயிர் உள்ளிட்ட அத்தியாவாசி பொருட்கள் மீதான 5சதவீத ஜிஎஸ்டி வரியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்ய கோரி நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இட்லி தட்டு ,வடை மாலையுடன் நெல்லை சந்திப்பில் உள்ள ஸ்ரீபுரம் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.செந்தில் தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் ,மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் நிறைவுரை ஆற்றினார் . இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரிசிக்கு ஜிஎஸ்டி வரியா?
தென்காசி
அரிசி, பருப்பு, பால், தயிர் போன்ற பொருள்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி கொண்டு வந்ததை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி தபால் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் சிபிஎம் தென்காசி மாவட்ட குழு சார்பாக நடைபெற்றது தி. கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன் துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம் தங்கம், மேனகா ,மாவட்ட குழு உறுப்பினர் பி.வேலுமயில் பேசினர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவிலில். தாலுகா செயலாளர் பா. அசோக் ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.உச்சிமாகாளி தூவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன் நிறைவு செய்து பேசினார். 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தந்தி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ஒன்றிய மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தூத்துக்குடி மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழைகளின் வயிற்றை நிரப்பும் அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி, பெரு முதலாளிகளின் கஜானாவை நிரப்பும் வைரத்திற்கு 1.5 சதவீத ஜி எஸ் டி கொண்டுவந்துள்ள ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபி எம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகம்மது, மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் ஆகியோர் உரை ஆற்றினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ரசல், சண்முக ராஜ், பேச்சி முத்து, பூ மயில், புவி ராஜ், ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மருங்கூர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார உறுப்பினர் கே. எஸ் லெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் அந்தோனி, வட்டார செயலாளர். எம். சிவதாணு உள்ளிட்டோர் பேசினர். திரளான மக்கள் கலந்து கொண்டனர்.