districts

img

சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, அக்.30- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 639 மனுக்கள் பெறப்பட்டன.  தகுதியான மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.