தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மதுமதி, தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.