சின்னாளபட்டி, ஜூன் 8- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுற் றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்பு ணர்வை சிறப்பாக செயல்படுத்திய கொத் தப்புள்ளி ஊராட்சிக்கு பசுமை முதன்மை யாளர் விருதினை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி அன்பரசு .இவரும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.வி.ரெங்க சாமி மற்றும் ஊராட்சி செயலாளர் செந் தில்குமார் ஆகியோர் கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு திட்டங் களை சிறப்பாக செயல்படுத்தி வந்தனர். உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாவட்ட அளவிலான பசுமை முதன் மையாளர் விருதினை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரி அன்பரசிடம் வழங்கினார். விருதினை பெற்ற ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரி அன்பரசு ,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விரு தினை காண்பித்து, வாழ்த்து பெற்றார். இதுபோல பல்வேறு விருதுகளை பெற ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கான நலப் பணிகளை முனைப்போடு செயல்படுத்த வேண்டுமென அமைச்சர் வாழ்த்தினார்.