districts

மதுரை முக்கிய செய்திகள்

நவ.1 இல் கிராம சபை கூட்டம்  தேனி ஆட்சியர் தகவல்

தேனி, அக்.22-  தேனி மாவட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 1 ஆம்  தேதி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளி லும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால், நடத்தப்பட இருக்கிறது. 130 கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகை யில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட அனைத்து  வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாளன்று கொரோனா  வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடை வெளியுடன், முகக்கவசம் அணிந்தும், இடத்தினை கிருமி  நாசினி கொண்டு, சுத்தம் செய்தும்  கிராம சபைக் கூட்டம்  நடைபெற வேண்டும்.

சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் 

தேனி, அக்.22- தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கும் அர சாணை எண் 288 மற்றும் 392-ஐ திரும்பப்பெற வேண்டும். குடியிருக்க லாயக்கற்ற துணை மைய கட்டிடத்திற்கு பிடித்தம் செய்த வாடகைத் தொகையை திரும்ப வழங்க வேண்டும். துறையில் பிற ஊழியர்களின் பணியை சுகா தார ஊழியர்களின் மீது திணிக்கக் கூடாது என்பன  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிருந்தா தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் சசி கலா முன்னிலை வகித்தார். இதில் செவிலியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கம் எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் மனு அளித்தனர். போராட்டத்தை ஆத ரித்து அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தாஜுதீன், இணைச் செயலாளர் முத்தையா ஆகியோர் பேசினர்.

இராமநாதபுரம்: அக்.28 இல் மீனவர் குறைதீர் கூட்டம்

இராமநாதபுரம், அக்.22- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறை கேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக் கொண்டதினைத், தொடர்ந்து அக்டோபர் 2022 மாதத்திற்கான குறைகேட்பு கூட்டம் வருகின்ற அக்டோபர் 28 அன்று பிற்பகல் 3.30  மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக குறைகேட்பு கூட்ட அரங்கில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் கூட்டம் நடை பெற உள்ளது.  அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்  இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

சிவகங்கை, அக்.22- வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், தமிழ்நாடு அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்  தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டும், இந்திய தூதரகங்களில் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர் களை மியான்மர், தாய்லாந்து மற்றும் கம்  போடியா ஆகிய நாடுகளுக்கு அதிக சம்ப ளத்தில் வேலை என்ற பெயரில் சுற்றுலா  விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று  துன்புறுத்தப்படுவதாக தகவல் வரப்பெற் றுள்ளது. இனிவரும் காலங்களில் வெளிநாடு களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்  யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விபரங்களை தெரிந்து கொண்டும், அவ்வாறு விவரங்கள் தெரி யாவிடில், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்  மைத்தன்மையை உறுதி செய்து கொண்  டும், இந்திய தூதரகங்களில் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரை களின்படியும், வெளிநாட்டு வேலைக்கு  செல்லும் இளைஞர்கள் கடைப்பிடிக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுதொடர்பாக உதவி தேவைப்படின் 96000 23645, 87602 48625,  044-28515288 என்ற தொலைபேசி எண் களுக்கு தொடர்பு கொள்ளுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரி வித்துள்ளார்.

துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ஆளுநர் பன்வாரிலாலுக்கே முழுப்பொறுப்பு; எனக்கு தொடர்பு இல்லை

முன்னாள் அமைச்சர்  கே.பி.அன்பழகன்  மறுப்பு

தர்மபுரி, அக்.22-  “நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக  இருந்தேன். அங்கு மிகவும் மோசமாக  இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது”  என முன்னாள் தமிழக ஆளுநரும் தற்போது பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோ ஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனால் அதிமுக தலைவர்களும் கட்சியின ரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு  முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்புத் தெரி வித்துள்ளார். தருமபுரியில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தமிழகத்தில் துணைவேந் தர் பதவிக்கு, 40 கோடி முதல், 50 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது என  சொல்  வது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் வாய்ப்பு, அங்கு ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோ ஹித்துக்கு இல்லை என்பதால், தமிழகத் தின் மீது, குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் துணைவேந்தர்  நியமனம் என்பது, முழுக்க, முழுக்க ஆளு நரைச் சார்ந்தது. அதில் எந்தத் தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழுப் பொறுப்பு ஆளுநரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித்துறை அமைச்ச ருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறினார். பன்வாரிலால் புரோஹித் 2017-ஆம் ஆண்டு  அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 2021-ஆம் ஆண்டு 17 செப்டம்பர் 17-ஆம்  தேதி வரை தமிழக ஆளுநராக இருந்தார்.  அன்றைக்கும்  பிரதமர் மோடி தான், மோடி  தான் இவரை ஆளுநராக நியமித்தார்.  துணைவேந்தர் நியமனத்தில் அதி முக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழ கன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை  என்கிறார். அப்படியென்றால் துணைவேந் தர் வியாபாரம் நடந்தது எப்படி என்பதை  நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய பாஜக அரசுக்குத்தான் உள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் 14 ஆண்டுகளுக்கு பின் 71 அடியை எட்டிய வைகை அணை

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தேனி, அக்.22-  தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட் டுள்ளது .14 ஆண்டுகளுக்கு பின் வைகை அணை 71 அடியை எட்டி யுள்ளது .கும்பக்கரை ,சுருளி அரு வியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில  தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.‌ 71 அடி நீர்மட்டம்  கொண்ட வைகை அணை கடந்த 17 ஆம் தேதியன்று காலை 69அடி யை எட்டியது. இதனால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கரை யோரப் பகுதி மக்களுக்கு இறுதி  கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொட ர்ந்து அன்றைய தினம் இரவில் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இத னால் அணையின் நீர்மட்டம் 70 அடி யை எட்டியது. 70 அடியை எட்டிய தும் 7 பெரிய மதகுகள் வழியாக அதிகப்படியான உபரிநீர் வெளி யேற்றப்பட்டது. இருந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து காணப் பட்ட நிலையில், சனிக்கிழமை  மாலை 3 மணியளவில் அணை யின் முழுநீர்மட்டமான  71 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையின் 7 பெரிய மற்றும் சிறிய மதகுகள் வழியாக நீர்வரத்துள்ள  

1,817கன அடி நீர் உபரிநீராக வெளி யேற்றப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு  பிறகு கிட்டத்தட்ட 14ஆண்டு களுக்குப் பின் இந்த ஆண்டில் 71 அடி நீர் தேக்கப்பட்டிருப்பது குறிப்  பிடத்தக்கது. கடந்த சில ஆண்டு களாக 69 அடியில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் 70 அடி யில் உபரிநீர் வெளியேற்றப்பட் டது.‌ ஆனால் தற்போது 71அடிக்கு  வைகையில் தண்ணீர் தேக்கப்பட்டி ருப்பது 5 மாவட்ட விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கொடைக்கானலில் பெய்த கன  மழையால் கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் பாது காப்பு கருதி குளிக்கத் தடை விதிக்  கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் சோத்துப்பாறை அணை நிரம்பி  கூடுதல் தண்ணீர் வெளியேற்றப் படுவதால் வராக நதியில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேகமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளி  அருவியிலும் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக் கொட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1731 கன அடி ,திறப்பு 511 கன அடி .மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 408 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி பாசனத்திற்கும், 368 கன அடி  நீர் உபரியாகவும் திறக்கப்படுகி றது. சோத்துப்பாறை அணை முழு நீர்மட்டமான  126.60 அடியில் நீடிக்கி றது. 251 கனஅடி நீர் வருகிறது. 30  கன அடி நீர் பாசனத்திற்கும் 221 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது. மழையளவு  பெரியாறு 8.8, தேக்கடி 1.8, கூட லூர் 2, உத்தமபாளையம் 1.2,  வைகை அணை 2.6, மஞ்சளாறு 5,  சோத்துப்பாறை 16,  அரண்மனைப்  புதூர் 0.2, போடி 7.2, பெரியகுளம் 24 மி.மீ மழையளவு பதிவாகி உள்  ளது.

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

இராமநாதபுரம், அக்.22- வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன்  துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழ மையன்று ஏற்றப்பட்டது.   தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகி உள்ளது.  இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகை யில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றதம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.  மேலும்  இராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி,  சோழியகுடி,கீழக்கரை,ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று மீனவ சங்கத்தினர் அறி வுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் இருந்து  3 பேர் தனுஷ்கோடி வருகை

இராமநாதபுரம்,அக்.22- இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி யால் அங்கிருந்து மக்கள் தமிழ்நாட்டின் தனுஷ் கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் அக்டோபர் 22 சனிக்கிழமையன்று இந்திய கடலோர காவல்படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பின் போது மூன்றாம் மணல் தீடையில்  மூன்று பேர் இருப்பதை கண்டனர். அவர்களிடம் நடத்திய விசா ரணையில் இலங்கையில்  இருந்து படகு மூலம் வந்ததாக தெரிவித்தனர்.  மூன்று பேரையும் அழைத்து வந்து கடலோர  காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.  காவல்துறை யினர் மண்டபம் அழைத்து சென்று நடத்திய விசாரணை யில்  இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் செட்டி தெருவைச்  சேர்ந்த ஜெ.சாந்தி(44),அவரது மகன் அஜந்தன் (18),  மகள் சுரபி(11) என்பதும். தலைமன்னார் வந்து அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு படகில் வந்து ஆதாம் பாலம் மணல்திட்டு பகுதியில் மூன்றாம் மணல் திட்டில்  இறக்கி விட்டு திரும்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

1,100 கிலோ  மஞ்சள் பறிமுதல்

இராமநாதபுரம், அக்.22- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மஞ்சள் கடத்தல் நடை பெற உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு வெள்ளிக்  கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்து.  இதனைதொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் கண்கா ணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு நாட்டுப்படகில் 50 கிலோ எடையுள்ள 22 மூடையில் 1,100 கிலோ விராலி மஞ்சள், இரண்டு மூடையில் செருப்பு இருந்ததை கண்டு பிடித்தனர். இதனையடுத்து, பொருட்கள் மற்றும் நாட்டு படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்கு மறைத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் அமைப்பு தினம் 

தேனி, அக்.22-  அகில இந்திய பிஎஸ்என்எல் -டிஓடி  ஓய்வூதியர்கள் சங்கத்தின் 14 ஆவது சங்க அமைப்பு தினம் வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது . தேனி தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என் .முத்துரத்தினம் தலைமை வகித்தார் . மூத்த உறுப்பினர் வி .பார்த்தசாரதி  சங்கக் கொடி யை ஏற்றிவைத்தார் . கிளை செயலாளர் ஸ்ரீராமன் வர வேற்று பேசினார் . அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர்  கே .துரைராஜ், ரயில்வே ஓய்வூ தியர் சங்க  தலைவர் பாஸ்கரன், சிஐடியு  மாவட்டக்குழு உறுப்பினர் டி.கே .சீனிவாசன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  கிளை செயலாளர் செந்தில்குமார், ஒப்பந்த ஊழியர்  சங்க  கிளை செயலாளர் பழனிவேல் ராஜன் ஆகியோர்  வாழ்த்தி பேசினர் .சங்கத்தின்  மாநில உதவி செயலர் எஸ்.ஜான் போர்ஜியா சிறப்புரை ஆற்றினார். எஸ் .ராஜன்  நன்றி கூறினார் .நிகழ்ச்சியின் மூத்த உறுப்பினர்கள் கவு ரவிக்கப்பட்டனர்.

மின்னல்-மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

நத்தம், அக்.23- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி க்குட்பட்ட இலுப்பபட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது50).விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார்.  இந்த நிலையில் அதே  பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன்புறம் உள்ள மரத்தடியில் 2 மாடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது இரவு திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது, அப்போது மின்னல் தாக்கியதில் 2 மாடு களும் சம்பவ இடத்திலேயே  இறந்தன.இதுகுறித்து தக வல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் முத்து, மற்றும்  செந்துறை கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மாட்டை அதே பகுதியில் பரிசோதனை செய்த னர்.உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மங்கம்மா சாலையைச் சேர்ந்தவர் அழகு (வயது60). இவருடைய பசுமாட்டை களத்து வீட்டில் கட்டி இருந்தார். இங்கும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மின் கம்பத்திலிருந்து ஒரு மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது.

மழைநீர் செல்ல நிரந்தர வடிகால் அமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மதுரை, அக்.22- மதுரை  மாநகராட்சி  78 வது வார்டு ஜெய்ஹிந்து புரம் ஜீவாநகர் பகுதி தென்  றல் நகர் பகுதியில் மழை பெய்தால் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் பெரும் அவதி பள்ளி செல்லும் மாண வர்களும் பள்ளிக்கு செல்வ தில் மிகப்பெரும் சிரமம் ஏற்  பட்டு வருவதால் நிரந்தர மாக மழை நீர் செல்வதற் கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்  என்று அப்பகுதி பொதுமக்  கள் கோரிக்கை வைத்துள் ளார்கள்.  தொடர்ந்து மேற்கு - 2ஆம் பகுதிக்குழு செயலா ளர் ஏ. எஸ். செந்தில்குமார் கூறுகையில் மழைக்காலங் களில் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின் றார்கள். மழைநீர் தேங்கு வதால் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் இப் பகு தியில் உள்ள குழந்தை களுக்கு ஏற்படுகிறது தற் காலிகமாக தண்ணீரை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நிரந்தர மாக தண்ணீரை மழை நீர் வாய்க்கால்களுக்கு கொண்டு செல்வதற்கு உரிய நட வடிக்கையினை மாநக ராட்சி நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும்.  இப்பகுதியில் தனியார் பள்ளி ஒன்றும் இயங்கி வரு கிறது அதிகமான குழந்தை கள் பள்ளிக்கு சென்று வரு கிறார்கள் மழை நீரில் அவர் கள் கடந்து செல்வதே மிக வும் வேதனையாக உள்ளது. பள்ளி சீருடடையில் செல் லும் போது வாகனங்களில் வேகமாக வருபவர்கள் கவ னக்குறைவால் சீருடையில் தண்ணீர் தெரித்து அந்த சீரு டையுடன் பள்ளிக்கு செல்  லும் அவலநிலை உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை நேரத்தில் இப்படி தெருக்களி லும், வீடுகளிலும் மழைநீர் தேங்கினால் மக்கள் என்ன செய்யமுடியும். தொடர்ந்து மழை பெய்யும் காலம் என்ப தால் மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

கன்னிசேரிபுதூர் ஊராட்சியில் கமிசனுக்காக சண்டையிடும் ஆடியோ வைரல்

ஊராட்சி துணைத் தலைவியின் கணவர் மிரட்டல்-மக்கள் அதிர்ச்சி

விருதுநகர், அக்.22- விருதுநகர் அருகே கமிசனுக்காக  பஞ்சாயத்து  தலைவர் மற்றும்  துணைத்  தலைவியின் கணவர் ஆகியோர்  சண்டை யிடும் ஆடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. விருதுநகர் அருகே உள்ளது கன்னிச் சேரிபுதூர் ஊராட்சி.  இதன் தலைவராக ஜெயந்தி என்பவர் உள்ளார். துணைத் தலைவராக இருந்து வருபவர் கவிதா. இவரது கணவர் செல்லப்பாண்டியன். இவர்கள் இருவரும்  கமிஷனுக்காக சண்டை யிடும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த ஆடியோவில், செல்லப்பாண்டி யனின் மிரட்டலை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தான் மருந்தை குடித்து சாகப் போகிறேன் என ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயந்தி  கதறுகிறார். ஆனால், அவர் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்பேசியிலேயே  மிரட்டுகிறார். கடைசியில்  ஜெயந்தி, அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் எனவும் கெஞ்சுகிறார். அதற்கு, ராஜினாமா செய்து விடு என அவர் மிரட்டு கிறார். அத்துடன் அந்த உரையாடல் முடி வடைகிறது. பெண் என்றும் பாராமல் மிரட்டி தற்கொலை செய்ய போகிறேன் என்று சொல்லியும் ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டும் துணை தலைவரின் கணவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உள்ளாட்சி நிர்வாகங்களில் 7 முதல் 15 சதவீதம் வரை கமிசன் பெறப்படு கிறது என்றால் எப்படி மக்கள் பணி சிறப்பாக நடைபெறும் எனவும் கேள்வி எழுப்பு கின்றனர்.

இறந்தவர் உயிருடன் வந்ததால்  குடும்பத்தினர்-கிராமமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல், அக்.22- திண்டுக்கல் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டியில்  வசிப்பவர் ஐயா மலை என்பவர் மகன் பழ னிச்சாமி (வயது 72 ). இவர் சில தினங்க ளுக்கு முன் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு  ஒயின் ஷாப் அருகே நடைபெற்ற விபத்தில் மரணமடைந்தார்.  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உடல் சேர்க்கப்பட்டது. விபத்தில் மரணம் அடைந்தவரின் புகைப் படம் சமூக வலைத்தளத்தில் வெளியான தையொட்டி பெரியகோட்டை பாறைப்பட்டி யில் வசிக்கும் பழனிச்சாமி தான் இறந்தார் என்று கருதிய அவரது மகள் வனிதா, மகன் சின்னத்தம்பி ஆகியோர் மற்றும் உறவி னர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு அடையாளங்களை சரிபார்த்து உடலைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் உடலை அடக்கம் செய்தனர் இந்நிலையில் வெளி யூர் சென்ற பழனிசாமி வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்தவர்கள், புதைக்கப் பட்டவர் பேயாக வந்துவிட்டார் என்று வீட்டை விட்டு அலறி அடித்து ஓடினர்.  இதனை  அடுத்து முதியவர் பழனிச்சாமி, நான் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கி றேன் என்று எடுத்துச் சொன்ன பிறகு கிராம மக்களும் உறவினர்களும் நம்பினர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.  முதல் தகவல் அறிக்கை பதிந்த திண்டுக் கல் வடக்கு காவல் நிலையத்திலும் உடலை புதைத்த எல்லைக்குள் வரும் வட மதுரை காவல் நிலையத்திலும் உயிரு டன் வந்த முதியவர் பழனிச்சாமியையும் அவரது மகள் வனிதா மற்றும் மகன்  சின்னத்தம்பி ஆகியோரை வரவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .போலீ சாரிடம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று பழனிச்சாமி வாக்குமூலம் கொடுத தார். அப்படி என்றால் இறந்தவர் உடல் யாருடையது அவருடைய உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் இறந்த வர் யார் என்றும் இறந்தவரின் உண்மை யான உறவினர்கள் யார் என்றும் தேடி வருகிறார்கள்.