மதுரை, ஏப். 28- மதுரை மஞ்சனக் கார தெருவில் உள்ள சிங்கார தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளியன்று ஆண்டு விழா மற்றும் கேஜி மாணவர்களுக்கான பட்ட மளிப்பு விழா , மாணவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் உத்தரவிற்கு ஏற்ப மதுரையில் உள்ள அரசுப் பள்ளிக ளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் விழிப்பு ணர்வு பேரணி உள்பட பல்வேறு நட வடிக்கைகளை அந்தந்த பள்ளி ஆசி ரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர், இதில் மதுரையில் 1919ம் ஆண்டு துவங் கப்பட்டு தற்போது 104ஆண்டுகள் நிறைவு பெறும் சிங்கார தோப்பு மாநக ராட்சி நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு முடித்து இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேரும் 15 மாண வர்களுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கேஜி படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முடித்து பட்டம் வாங்கும்போது அணிவிக்க கூடிய அங்கி போல் அணிவித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர், மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தியது பெற்றோர்க ளுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் தலைமை தாங்கினார், பள்ளியின் தமிழ் ஆசிரியர் ராமலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார் மதுரை மாநகராட்சி துணை மேயர் தி நாகராஜன் மாணவர்களுக்கு பட்ட மளித்து சிறப்புரையாற்றினார், மாநகராட்சி கல்வி குழு தலைவர் எம்.பி.ஆர். ரவிச்சந்திரன், 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பானு முபாரக் மந்திரி, மாநக ராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன் மதுரை தெற்கு வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடென்சி தலைவர் கார்த்தி கேயன் மோகன் தாஸ் ஆகியோர் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர், மாணவர்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன ஆசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.