districts

img

ஆளுநர் ஆர் என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாணவர்கள் போராட்டம்

மதுரை, செப்.8- ஆளுநர் ஆர் என். ரவி யைக் கண்டித்து மதுரையில் மாணவர்கள் வெள்ளிக்கிழ மை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், பாரதி யார் பல்கலைக்கழகம், கல்வியல் பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர்க ளை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் தன்னிச் சையாக, தான்தோன்றித் தனமாக மாநில அரசிடம் கலந்த ஆலோசிக்காமல் அறிவிப்பு செய்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் காவியைப் புகுத்தும் அவரது நடவ டிக்கையைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக் குழு  சார்பில் மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போரட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர்கா.பிருந்தா,  மாநி லக்குழு உறுப்பினர் பாலா, கிஷோர், டேவிட், பல்கலைக் கழக கிளை ஒருங்கிணைப் பாளர் நிர்மல் உட்பட பலர் பங்கேற்றனர்.