districts

img

ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கிடுக! அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.1- ஓய்வுபெறும் நாளன்றே  போக்குவரத்து தொழிலாளி களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். 2020 மே மாதம் முதல் விருப்ப ஓய்வு  பெற்ற மற்றும் மர ணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பணப்பலகை உட னடியாக வழங்க வேண்டும். சேம நல நிதி பிடித்தம் செய்த தொகை யினை திரும்ப வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு மதுரை மண்டல தலைவர் ஏ. முருகேசன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணன், மாநில துணை பொதுச் செயலா ளர் ஆர். தேவராஜன் ஆகியோர்  விளக்கிப்  பேசினர்.  சிஐடியு அரசு  போக்குவரத்து தொழிலாளர் மாநில சம்மேளன துணைத்தலை வர் வீ. பிச்சை ஆதரித்துப்  பேசி னார்.  திண்டுக்கல் மாவட்ட பொதுச்  செயலாளர் எஸ். ஜேம்ஸ் கஸ்பார்  ராஜ், மதுரை மண்டல பொருளா ளர் பி. சௌரி தாஸ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஆறுமுகம் உள்பட  ஏராளமானோர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் புறநகர் பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் சிஐடியு மாவட்டச்செய லாளர் எம். சிவாஜி மற்றும் நிர்வாகி கள் பங்கேற்றனர்.