தேனி ,டிச.23- தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை அரசு முதன்மைச் செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக் ஆய்வு செய்தார் . தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டு மானப்பணி, உத்தமபாளையம் பேரூராட்சி யில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி, அரசு முதன்மைச் செயலாளர் அ.கார் த்திக்,மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர் ஊராட்சியில் கொக்கொ பயிரிடப்பட்டுள்ள நிலத்தினையும், அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு குடிலினையும், பூமலைக்குண்டு ஊராட்சி யில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ள நிலத்தினையும் பார்வையிட்டார்.
உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப் பட்டுள்ள உண்டு, உறைவிடப்பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, தங்கும் அறை, கழிப்பறை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம், வீரபாண்டி பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலை யத்தில் கல்வி கூடங்கள், நிர்வாக அலுவ லக கட்டடம், மாணவ, மாணவியர்களின் தங்கும் விடுதி, கால்நடை சிகிச்சைக்கான வளாகக்கூடம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) இராஜாராம் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.