அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம்
மதுரை, அக்.11- தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் செவ்வாயன்று காணொளி வாயிலாக நடை பெற்றது. கூட்டத்தில் மதுரை மாநகர சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய கோரியும் மகப்பேறு மருத்து வர்களின் பணிச்சுமையை குறைக்கக் கோரியும் சங்கத் தின் சார்பில் மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட் டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு கோரிக்கைகளுக்கும் இதுவரை அரசு தரப்பிலி ருந்து எந்த ஒரு தெளிவான உறுதியும் அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் போராட்டங்களை தீவிரப் படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக அக்டோபர் 12 முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் மாநிலம் முழு வதும் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களை புறக்க ணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கையில் ரயில்கள் நின்று செல்ல ஒன்றிய இணை அமைச்சரிடம் மனு
சிவகங்கை, அக்.11- சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சிவகங்கை நகர மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் அனைத்து கட்சிகள், அனைத்து சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் தில்லி சென்று ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ் சஹீப் பட்டீல் தானேவ்-வை சந்தித்து மனு அளித்து கோரிக்கை கள் குறித்து விளக்கப்பட்டது. இதில், முதல் 5 கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றி தருவதாக ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சர் உறுதியளித்தார். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்சிம்மன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், துபாய் காந்தி, மகேஷ், விஜயகுமார், ராம தாஸ், ஆறு.சரவணன் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் முத்துக்கண்ணன், ஒப்பந்ததாரர் சங்கம் கண்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், அனைத்து சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தகர செட்டில் பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
விருதுநகர், அக்.11- விருதுநகர் அருகே கவுண்டம்பட்டியில் தோட்டத்தில் உள்ள தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆமத்தூர் காவல்துறையினர், கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் கவுண்டம்பட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, குருமூர்த்தி என்பவர் தோட்டத்தில் உள்ள தகர செட்டில் எவ்வித அனுமதி மற்றும் உரிமம் இன்றி பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து, குருமூர்த்தி (32) மீது வழக்குப் பதிவு செய்ததோடு, அங்கி ருந்த 30 சாட் வெடிகள் 300 மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சார்பில் பிரச்சார இயக்கம்
திருவில்லிபுத்தூர், அக்.11- தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கை வலி யுறுத்தி மாநில அளவிலான காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதை ஒட்டி திருவில்லிபுத்தூர் நகராட்சி அலு வலகத்தில் புதனன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தில் சங்கத்தின் மாநிலத் தலை வர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோ தரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கா. கருப்பையா, மாவட்ட இணைச் செயலாளரும் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி யுமான மணிமாலாபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
திருச்சுழி, அக்.11- திருச்சுழி அருகே சிலுக்கப்பட்டி பகுதியில் சுப்பலட்சுமி (58) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன் றுள்ளனர். ஆனால், அவர் தப்பிச் சென்று எம்.ரெட்டிய பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணியைச் சேர்ந்த யுவஸ்ரீதர்(23), பரமக்குடி மணிநகரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகி யோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையில் என்ஐஏ சோதனை
மதுரை, அக்.11- தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்த தாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிரவாத எதிர்ப்பு சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (உபா) கீழ் கடந்த ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு தடை செய்யப் பட்டது. பிஎப்ஐ அமைப்பில் ஏற்கனவே இருந்த உறுப்பி னர்கள், வெவ்வேறு அமைப்பில் சட்ட விரோத செயல் களில் ஈடுபட்டு வருவதாக, அமைப்பினர் மற்றும் அவர் களுடன் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அடிக்கடி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் புதனன்று தமிழ்நாடு, உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லி ஆகிய மாநி லங்களில் பிஎப்ஐ அமைப்புடன் தொடர்புடைய நபர் களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். தில்லியின் ஹவுஸ் காசி, தமிழ்நாட்டில் மதுரை, உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி, லக்னோ, பஹ்ரைச், சீதாபூர், ஹர்தோய் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, தானே, நவி மும்பை ஆகிய ஐந்து இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.
நியோமேக்ஸ் மோசடி வழக்கு பெண் உட்பட 2 இயக்குநர்கள் கைது
மதுரை, அக்.11- நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்ப டையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நியோ மேக்ஸ் வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான மதுரை விராட்டி பத்து பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், அவரது சகோ தரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரு மான சிங்காரவேலன் ஆகியோரை காவல்துறையினர் செப்டம்பர் 18 அன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மைக்கேல் செல்வி, நடேஷ் பாபு ஆகிய மேலும் இரு இயக்குநர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் புதனன்று கைது செய்தனர்.
‘லியோ’ சிறப்பு காட்சி: போலி டிக்கெட் விற்பனை
மதுரை, அக்.11- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளி யாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 18 அன்று மாலை 6:30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரை யரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலை தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தக வல் பரவியது இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில், லியோ திரைப்படம் சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை. இதனை யாரும் வாங்க வேண்டாம். திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியீடு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்’’ என குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் லியோ திரைப்பட சிறப்புக் காட்சி என்ற பெயரில் சமூகவலைத்தளங்கள் மூலம் போலியான டிக் கெட் விற்பனை செய்யும் நபர்கள் யார் என காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
இஸ்ரேலியர்களை கண்காணிக்க கொடைக்கானலில் சோதனைச்சாவடி
திண்டுக்கல், அக்.11- கொடைக்கானலில் தற்போது 2-ஆவது சீசன் காலம் துவங்க உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற் றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருவார்கள். வட்டக்கானல் பகுதியில் அவர்களுக்கான காட்டேஜ்கள் உள்ளன. தற்போது இஸ்ரேலில் போர் பதற்றம் அதி கரித்து உள்ளது. இவர்கள் முறையற்ற வகையில் தங்குவதை தடுப்ப தற்காக அவர்களது அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க வட்டக்கானல் பகுதியில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற சோத னைச்சாவடி தற்போது வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பழனி அருகே கார் விபத்தில் பெண் பலி: மூவர் படுகாயம்
திண்டுக்கல், அக்.11 பழனி அருகே சாலையோர தடுப்பில் மோதி கார் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியா னார். மூன்று பேர் படுகாயத்துடன் பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தூத்துக்குடியில் குழந்தை பிறந்த தனது மனைவி சுந்தராவை காரில் அழைத்துக் கொண்டு உடுமலைப் பேட்டை வந்துள்ளார். பழனி அருகே தாளையம் பகுதியில் கார் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோகன் ராஜின் தாயார் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த மூன்று பேருக்கு கால் துண்டான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: மஞ்சளாறு அணை விரைவில் நிரம்புகிறது
தேனி, அக்.11- நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் விரைவில் மஞ்சளாறு அணை முழு கொள்ளவை எட்டுகிறது. பெரியகுளம், வத்தலக்குண்டு பகுதி யில் குடிநீர், பாசன ஆதாரமாக மஞ்சளாறு அணை விளங்குகிறது. கொடைக்கானல் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இரண்டு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. அணை முழு கொள்ளளவு 55 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி தண்ணீர் வெளியேற்றப்படும். புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54 அடி. அணைக்கு 23 கன அடி வருகிறது. திறப்பு இல்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 866 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.13 அடியாக உள்ளது. 374 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 26.25 கன அடி. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு வீரபாண்டி-4, பெரியகுளம்-3.6, சோத்துப்பாறை-7, போடி 1, கூடலூர்-14.2, தேக்கடி-6.4, சண்முகா நதி அணை-13.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி: எஸ்பி அலுவலக ஊழியர் உட்பட 2 பேர் கைது
தேனி, அக்.11- போலி பணி நியமன ஆணை வழங்கி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தேனி மாவட்ட கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பணிபுரியும் ஊழியர் பழ னியப்பன் மற்றும் டாஸ்மாக் பணியாளர் மாரியப்பனை கைது செய்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையம் அருகே கோகிலாபுரம் மாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி (33). ஆசிரியை பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தி ருந்தார். இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பழனியப்பன், டாஸ்மாக் பணியாளர் தங்கமுத்து, பள்ளிக்கல்வித்துறையில் தட்டச்சராக பணிபுரியும் சேகர் ஆகியோர் அறிமுக மாகி உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மூவரும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய பாக்கியலட்சுமி 2021-ம் ஆண்டு பல்வேறு தவணைகளில் ரூ.11.30லட்சத்தை கொடுத் துள்ளார். இதற்கு ஆதாரமாக பத்தி ரத்தில் கையெழுத்து போட்டும் தந்துள்ள னர். பின்பு 2021-ம் ஆண்டு பிப்.11 அன்று பணிநியமன ஆணையை வழங்கியுள்ள னர். ஆனால் அந்த ஆணை போலியானது என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் ரூ.3.80 லட்சத்தை மட்டுமே திரும்ப கொடுத்துள்ளனர். மீதம் ரூ.7.50 லட்சத்தை தரவில்லை. இதுகுறித்து பாக்கியலட்சுமி தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதனடிப்படையில் சார்பு ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்தார். தங்கமுத்து, பழனியப்பன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தேனியை சேர்ந்த முருகன் மனைவி செல்வியிடம் வீட்டுமனை வாங்கி தருவ தாக ரூ.3.76 லட்சமும், தேனி பொம்மை யகவுண்டன்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் வீரராஜூக்கு நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் மோசடி பழனியப்பன் மோசடி செய்துள்ளதாக விசா ரணையில் தெரியவந்துள்ளது.