தூத்துக்குடி,ஆக. 23 தூத்துக்குடி மாவட்டத்தில் சலவைத் தொழில் மேம்படுத்துவதற்கு நவீன சலவையகம் அமைக்க ரூ.3 இலட்சம் அரசு நிதி உதவி பெற தகுதியுள்ள விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக அமைத்து நவீன சலவையகம் (Power Laundry unit) புதியதாக ஏற்படுத்திட ரூ.3 லட்சம் அரசால் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிய நவீன சலவையகம் தொடங்குவதற்கான தகுதி கள் மற்றும் நிபந்தணைகள்: குழுவானது 10 நபர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழு உறுப்பினர்கள் பிவ/மிபிவ/சீ.ம இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள உறுப்பினர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் Ministry of Micro small and medium enterprises) துறை யின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய நவீன சலவையகம் தொடங்கிட ஆர்வமாக உள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், குழுவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகத்தைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று 15.09.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் வருமா னச் சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை சான்று மற்றும் ஆதார் அட்டை சான்றுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.