districts

img

புத்தேரி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

நாகர்கோவில், ஜூன் 26- கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றி வந்த தாழக்குடி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.  தாழக்குடி பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புத்தேரி அருகே சாலையோர பள்ளதில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது  அப்பேருந்தில் இருந்த சுமார் 35 பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர் . உயிர் சேதம் ஏற்படாத நிலை யில் காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற னர். மேலும் இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

;