districts

img

ஆதரவற்ற முதியோருக்கு தடையின்றி உதவித்தொகை வழங்கிடுக! மதுரையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.15- 60 வயது நிரம்பிய முதியோர், கண வரை இழந்தவர்களுக்கு தடையின்றி உதவித் தொகை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் விரல் ரேகை இயந்திரத்தில் பதிவாக வில்லையெனில் கையெழுத்துப் பெற்றுக்  கொண்டு ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பிப்ரவரி 15 புதனன்று மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் தலைமை வகித்தார்.    மாநிலத் துணைத் தலைவர் கே. பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா, பொருளாளர் ஆர்.லதா, மாவட்ட நிர்வாகிகள் பி. மல்லிகா, பி. காசுப்பாண்டி, என். கல்பனா,  பாரதி, புவனேஸ்வரி மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.