வறட்சியால் கருகிப்போன பயிர்கள் சிவகங்கை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சிவகங்கை. டிச.28- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கே. வீரபாண்டி, மாவட்ட செயலா ளர் அரு.மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியில் போதிய மழை இல்லாமல், தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் கருகிவிட்டன. இதனால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கணக்கெடுப்புகளை துவக்கிட வேண்டும். மாவட்டத் தில் விளைச்சல் உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும். விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தாமதிக்காமல் செய்திட மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல் மின்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு பெற அழைப்பு
இராமநாதபுரம், டிச.28- இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம், உப்பூர் அனல் மின் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் அலகு 1,2,3 கொடுக்கலான அறிவிப்பு என்ன வென்றால், இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், சோளந்தூர் உள்வட்டத்தில் அமைந்துள்ள வளமா வூர், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய வருவாய் கிரா மங்களில் உப்பூர் அனல் மின்நிலையம் அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு இழப்பீட்டுத்தொகை வழங்கப் பட்டது. பட்டாதாரர்களுக்கு மூன்று முறை முறை யான அழைப்பாணை அனுப்பியும், கிராமங்களில் முகாம்கள் நடத்தியும் 110 பட்டாதாரர்கள் ஆஜ ராகி உரிய ஆவணங்கள் செலுத்தி இழப்பீட்டுத்தொகை பெற முன்வரவில்லை. வளமாவூர் கிராமத்தில் 42 பட்டா தாரர்களுக்கு ரூ.1,97,03,163 இழப்பீட்டுத்தொகையும், திருப்பாலைக்குடி கிராமத்தில் 7 பட்டாதாரர்களுக்கு, ரூ.10,59,678 இழப்பீட்டுத்தொகையும், உப்பூர் கிராமத்தில் 61 பட்டாதாரர்களுக்கு, ரூ.2,00,30,127 இழப்பீட்டுத்தொகை யும் தரப்பட வேண்டியுள்ளது. மேற்படி பட்டா தாரர்களோ, அல்லது அவர்களின் வாரிசுதாரர்களோ இந்த அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்குள் உரிய ஆவ ணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட பட்டாதாரர்களது இழப்பீட்டுத்தொகை வைப்பீடு செய் யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
மதுரை, டிச.28- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3 ஆவது வார்டு பகுதியில் உள்ளது நீராவி மேட்டுக் குளம். கடந்த மாதத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து 58 கால்வாய் மூலம் உசிலம்பட்டி கண்மாயில் தண்ணீர் பெருகியதாலும் இந்த குளம் நிரம்பியது. இந்நிலையில் திடீரென்று பெய்த மழை யால் குளத்தில் நிரம்பிய தண்ணீர் வெளியேறி அருகே உள்ள நீராவி மேட்டுத் தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மக்கள் பாத்திரங்கள் மூலம் நீரை வெளி யேற்றினர். இந்த குளத்தின் வடிகால் பகுதிகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. முறையாக தூர்வாரப்படவில்லை. இதுகுறித்து உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர்.
அறிவித்த தேதிக்கு முன்னரே ஒன்றிய அரசின் இலவச அரிசி திடீர் நிறுத்தம்
பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை, டிச.27- கொரோனா ஊரடங்கு காலத்தில் வறு மைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் ஒன்றிய அரசு, மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் இத்திட்டத்தை ஒன்றிய அரசு 2022 ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதி விசுவாசபுரி ஒன்றாவது தெருவில் உள்ள டிஓபி ஏபி 015 பாண்டியன் கூட்டுறவு வினியோக மையத்தில் செவ்வாய்க்கிழ மையன்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அட்டைதாரர்கள் அரிசி வாங்க சென்றனர். அப்போது ஒன்றிய அரசின் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உங்களுடைய குடும்ப அட்டை களுக்கு நிறுத்தப்படுகிறது என்று கூறி யுள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாண்டி கடை விற்பனையாளரிடம் கேட்ட போது, சென்னையில் இருந்தே எங்க ளுக்கு தகவல் வந்துள்ளது. வேண்டுமென் றால் பாருங்கள். உங்களுடைய ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்தால் எத்தனை கிலோ அரிசி என்பது வந்துவிடும் என்று கூறி, கடை விற்பனையாளர் காண்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குடிமைப் பொருள் வருவாய் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு ஏ.பாண்டி பேசினார். அவர் நேரடியாக வந்து ஆய்வு செய்து, அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு அங்கிருந்த பொது மக்கள் டிசம்பர் 31ஆம் தேதி தான் நிறுத்தப் படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதற்கு முன் எப்படி நீங்கள் நிறுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர். தாசில்தாருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறி யுள்ளார். இதனைத் தொடர்ந்து கடை விற்பனை யாளரிடம், நாளைக்கு எங்களுக்கு அரிசி வழங்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மறியல் செய்வோம் என்று வந்தி ருந்த மக்கள் கூறிவிட்டு சென்றர். இது குறித்து ஏ.பாண்டி கூறுகையில், இந்த கடையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் 99 பேர் பொருட்கள் வாங்குகின்றனர். இதில் 77 பேருக்கு அரிசி வழங்குவது நிறுத்தப்பட் டுள்ளது. அவர்களுக்கு ஒரு கிலோ சீனி 12 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டு, 35 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. தற் போது ஒரு கிலோ சீனி 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு, 20 கிலோ அரிசி தான் வழங் கப்படும் என்று கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசிய போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களால் முடிந்ததை பாருங்கள் என்ற தொனியில் பேசுகின்றனர். மக்களுக்கு அரிசி வழங்கப் படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தார்.
ரெட்டியார்சத்திரம் சாலை விரிவாக்கப்பணி தாமதம் சிபிஎம் போராட்டத்தால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
திண்டுக்கல். டிச.28- சாலை விரிவாக்கப்பணியை காலதாமதப்படுத்தும் அதிகாரிகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம் அறிவித்திருந்தது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டாலும் அதிகாரிகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். திண்டுக்கல் மேற்கு வட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றி யம் கொத்தப்புள்ளி கிராமத்திற்கு உட்பட்ட தாதன் கோட்டை பிரிவு, புதுக்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி வரை உள்ள சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக பொதுமக்கள் கலந்து கொள்ள கூடிய சாலை மறி யல் போராட்டம் புதனன்று நடத்தப் போவதாக அறி விக்கப்பட்டிருந்தது. மறியல் அறிவிப்பின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர் ஆகியோரை அழைத்து திண்டுக்கல்லில் செவ்வாயன்று மேற்கு வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிபிஎம் சார்பாக ஒன்றியச்செய லாளர் கே.எஸ்.சக்திவேல். தயாளன், சந்துரு, ஆறு முகம், ரமேஷ்கண்ணன் மற்றும் கொத்தப்புள்ளி ஊராட்சி துணைத்தலைவர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்ட னர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சாலை வரி வாக்க பணியை புதன் கிழமையே துவங்குவது என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்றும் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி அளக்க வந்த சர்வேயர்கள் தவறாக அளவீடு செய்ததோடு மட்டுமல்லாமல் அளவீடு செய்த அதிகாரி கள் முன்பு ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் அதனால் சாலை விரிவாக்கப் பணி காலதாமதம் ஆகிறது என்றும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறினர். பேச்சு வார்த்தைக்கு பிறகு புதனன்று அளந்த அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகள் இல்லை என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை மட்டு மல்லாமல் அவர்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழ லும் உருவாகியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மேற்கு வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
வாகனம் மோதி 2 பேர் பலி
சாத்தூர், டிச.28- சாத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் கருப்பசாமி (49). இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இவரது தலைமையில் 30 பேர் திருச்செந்தூருக்கு மாலை அணிந்து பாதயாத்தி ரையாக புறப்பட்டனர். சாத்தூரையடுத்து 4 வழிச்சாலையில் புல்வாய்ப்பட்டி விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த அடையா ளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தில் கருப்பசாமி மற்றும் சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த சங்கரன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். மேலும் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து வாக னத்தை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் சாராட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நோட்டீஸ்
தேனி, டிச.28- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமி புரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டு வதற்காக 2004 ஆம் ஆண்டு 10 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.6ஆயிரத்து335 இழப்பீடாக அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த தொகை வழங்கியதாகக் கூறி தயாளன், கிருஷ்ணமூர்த்தி, வீரப்பன், கண்ணப்பன், சித்ரா, வர லட்சுமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். சென்ட் நிலத்திற்கு ரூ.20ஆயிரம் வீதம் வழங்கக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. ஆனால் இத்தொகையை வருவாய்த்துறை வழங்க வில்லை. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மாரியப்பன், பெரிய குளம் சார்ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து அமீனாக்கள் வழக்கறி ஞர்கள் சார்ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அலுவலகம் முன்பு ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இவர்களிடம் சார்ஆட்சியர் சிந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் திரும்பிச் சென்றனர்.
சிறை தண்டனை விதித்ததால் நீதிமன்ற வளாகத்தில் அரளி விதையை தின்ற குற்றவாளி
விருதுநகர், டிச.28- போக்சோவில் 10 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்ற வளாகத்தில் அரளி விதையை தின்று தற் கொலை முயற்சியில் ஈடுபட்டார். இராஜ பாளையம் அருகே உள்ள வடக்கு தேவதா னத்தைச் சேர்ந்த குமாரவேலு என்வர் மகன் செல்வம்(26).இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர் பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெயஆனந்த், குற்றவாளி செல்வத் திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சிறை யில் அடைக்க ஏற்பாடுகளை செய்து கொண் டிருந்தனர். அப்போது, குற்றவாளி செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரளி விதை யை யாரும் எதிர்பாராத நேரத்தில் விழுங்கி னார். இதைப்பார்த்த போலீசார், சுதாரித்துக் கொண்டு, அவர் விழுங்கிய அரளி விதை களை வெளியே துப்பச் செய்தனர். பின்பு, செல்வத்தை திருவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து உள் நோயாளியாக அனும தித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் பாது காப்புடன் செல்வம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இசம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி-மானாமதுரை டெமோ ரயிலை விருதுநகர் வரை நீட்டித்திடுக!
பொதுமக்கள் வலியுறுத்தல்
விருதுநகர், டிச.28- திருச்சி கோட்டம் மன்னார்குடியில் இருந்து மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வரும் டெமோ ரயிலை ( வண்டி எண் 06829) விருதுநகர் சந்திப்பு ரயில் நிலை யம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டுமென ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திலி ருந்து இரவு நேரங்களில் சென்னை, இராமேஸ் வரம், கோவை, பெங்களூரு, மைசூர், மும்பை, கச்சகோடா, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நக ரங்களுக்கு செல்ல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரு கின்றன. பகல் நேரங்களில் மதுரை-செங் கோட்டை, நாகர்கோவில்-கோவை, பாலக்காடு -திருச்செந்தூர், ஈரோடு-நெல்லை, மயிலாடு துறை-செங்கோட்டை உள்ளிட்ட நகரங்க ளுக்கு சென்று வர பயணிகள் ரயில் சேவை யும் உள்ளன. அதேவேளை, விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல போதிய ரயில் சேவை பல வருடங்களாக இல்லை. இதனால் பயணிகள், திருச்சி வரை சென்று அங்கிருந்து வேறு ரயிலை பிடித்து செல்ல வேண்டிய நிலை தற்போது வரை தொடர்கிறது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரையுள்ள 67 கி.மீ தூரத்திற்கு கடந்த 2010 அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தன. மேலும், இப்பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் விருது நகர்-காரைக்குடி வழியாக திருச்சி வரை செல்லும் டெமோ ரயில் ஆகியவை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும், வாரத்தில் ஒரு நாள் மட்டும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கு கிறது. பிற நேரங்களில் இப்பாதையில் சரக்கு ரயில்கள் மட்டுமே சென்று வருகின்றன. பகல் நேரங்களில் இப்பாதையில் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. மேலும், இவ்வழியே பகல் நேரத்தில் பயணி கள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக் கப்பட்டால், திருவாரூர்,மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, கடலூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, அறந் தாங்கி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகள் மற்றும் வியா பாரிகள் எளிதில் சென்று வர ஏதுவாக இருக்கும். மேலும் பயண நேரமும் கணிசமாக குறையும். தென் மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட் டங்களுக்கு எளிதில் சென்று வரவும் பெரும் உதவியாக இருக்கும் என இரயில் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, திருச்சியிலிருந்து மன்னார்குடி யிலிருந்து மானாமதுரை வரை இயக்கப்படும் டெமோ ரயிலை (வண்டி எண் 06829) விருது நகர் வரை நீட்டிப்பு செய்தால், செங்கோட்டை-மதுரை , திருச்செந்தூர்-பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் மற்றும் சென்னை-குருவா யூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ், ஆகியவற்றிற்கு இணைப்பு ரயி லாக அமையும். தற்போது பயணிகள் ரயில் அனைத்தும், கோவிட்-19க்குப் பின் சிறப்பு ரயிலாக இயக்கப் பட்டு கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வரு கிறது. எனவே, இந்த டெமோ ரயிலை விருது நகர் வரை நீட்டிப்பு செய்தால், பயணிகளிடம் பெரும் வரவேற்பு இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கு லாபகரமாகவும் இருக்கும். ஏற்கனவே, மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டு வந்த பயணி கள் ரயிலை, மதுரை-செங்கோட்டை வண்டி யுடன் இணைத்து மயிலாடுதுறை-செங் கோட்டை சிறப்பு ரயிலாக மாற்றி தற்போது இயக்கப்படுகிறது. எனவே, ரயில்வே நிர்வாகமானது, தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் டெல்டா மாவட்டங்களுக்கு எளிதில் சென்று வர மன்னார்குடி-மானாமதுரை டெமோ ரயிலை உடனடியாக நீட்டிப்பு செய்திட உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டுமென தென் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.