districts

பயிர்க் காப்பீட்டை பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுத்திடுக!

சிவகங்கை, நவ.1- சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் மோகனசுந்தரம், மாவட்ட கூட்டுறவுத் இணைப்பதிவாளர் ஜீனு,சிவகங்கை  கோட்டாட்சியர் சுகிதா, தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் விஸ்வ நாதன், காளையார்கோயில் ஒன்றியச் செய லாளர் சாத்தப்பன், கீழநெட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அய்யாசாமி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் சந்திரன், ஆபிர காம், ராமு ஆகியோர் கலந்து கொண்ட னர்.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளர் விஸ்வ நாதன் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்  தில் பயிர் காப்பீடு பதிவு செய்து பாதிப்  புக்குள்ளான அனைத்து விவசாயி களுக்கும் காப்பீடு தொகை கிடைக்க வேண்டும். விவசாயிகளிடம் பயிர்க்காப்பீடு பிரிமியம் ரூ.120 கோடி. தமிழக அரசு பங்கு  ரூ.1375 கோடி, ஒன்றிய அரசு பங்கு ரூ.824  கோடி ஆக மொத்தம் ரூ.2759 கோடி பிரிமிய மாக வசூல் ஆகியுள்ளது.  இதில் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி  மட்டுமே காப்பீடு தொகையாக வழங்கி யுள்ளனர். ரூ.1750 கோடி பிரிமியத் தொகை  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்று விடுகிறது. பயிர்க் காப்பீட்டை தனி யாருக்கு கொடுக்காமல் மாவட்ட நிர்வா கம் பொதுத்துறை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்’’ என பேசினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் பகல் 3 மணி வரை உணவருந்தாமல் பசியோடு இருந்தனர். விவசாயிகள் அனைவருக்கும் சிவகங்கை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் அவரது சொந்த செலவில் உணவு வழங்கினார். விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.