தேனி, மார்ச்.18- தேசம் காக்கும் போ ராட்டத்தின் ஒருபகுதியாக நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி தேனியில் அனை த்து தொழிற்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கை களை எதிர்த்து மார்ச் 28, 29 தேதிகளில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடை பெறுகிறது. போராட்டத்தை விளக்கி நடைபெற்ற கருத்த ரங்கத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.முருகன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில தலைவர்களில் ஒருவரும், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கே. பாலபாரதி சிறப்புரை யாற்றினார். முதுகலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் பொ.அன்பழ கன், சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்தி ரன், ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செய லாளர் எஸ்.செல்லத்துரை, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்தி ரன், ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் கே.துரை ராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் டி.துரைபாண்டி யன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், சிஐடியு அரசு போக்குவரத்து கழக இணை செயலாளர் ஜி. கணேஷ்ராம், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் அகமது ஆதம், பிஎஸ்என் எல் ஊழியர் சங்க தலைவர் என்.முத்துரத்தினம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் கே.சந்திரசேகர், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் சங்க தலைவர் எஸ்.அரங்கசாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர் சங்க மத்திய சங்க நிர்வாகி ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.