districts

img

இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்

தூத்துக்குடி, ஜூலை 17- எட்டையாபுரம் சாலை யில் உள்ள சிஐடியு அலுவல கத்தில் மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை நடைபெற்றது. இதற்கு பொதுத் தொழி லாளர் சங்க மாவட்ட தலை வர் குமாரவேல் தலைமை வகித்தார். துணைத் தலை வர் ராமலிங்கம் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் பெருமாள் வேலை அறிக்கையை தாக் கல் செய்தார், மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி,  வரவு செலவு அறிக்கை தாக்  கல் செய்தார். தையல் கலை ஞர்கள் சங்க மாவட்ட செய லாளர் ரவி தாகூர், சிஐடியு  மாவட்ட இணை செயலா ளர் காசி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொது தொழிலா ளர் சங்க துணை தலைவர் இசக்கியம்மாள் நன்றியுரை ஆற்றினார். முறைசாரா நல வாரிய  பதிவுகளை எளிமைப் படுத்த வேண்டும், கட்டுமானம், ஆட்டோ வாரியம் போல்  உடல் உழைப்பு தொழிலா ளர்களுக்கும் பணப்பயன் உயர்த்தி வழங்க வேண்டும், 50 வயதில் பெண்களுக்கு பென்ஷன் வழங்க வேண்  டும், வீடு இல்லாதவர் களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுத்திட வேண்டும், பென்ஷன் மாதம் ரூபாய் 5000ஆக உயர்த்தி வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட தலைவராக குமாரவேல், மாவட்ட செயலா ளராக பெருமாள், மாவட்ட பொருளாளராக ஏ.எம்.முரு கன் உள்ளிட்ட 13 பேர்  கொண்ட புதிய நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.