districts

img

தையல் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்குக!

மதுரை, ஆக.17-  மதுரை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் 11 ஆவது ஆண்டு பேரவை மாவட்ட தலைவர் கே.கலையரசி தலை மையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ் துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன், பொருளாளர் ஜே.லூர்து ரூபி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சித்ரா வேலை அறிக்கையும், பொருளாளர் எம். சிவபெருமாள் வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச்  செயலாளர் இரா.லெனின் சிறப்புரையாற்றி னார். சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் ஐடா ஹெலன் நிறைவுரையாற்றினார். முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஆயிஷா பீவி,  சிஐடியு கொடியினை சவுந்தர பாண்டியன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். கூட்டுறவில் கூலி உயர்வும், சிக்கன சேமிப்பு வட்டியும், வைப்பு நிதிக்கு டிவி டென்டும் கொடுக்க வேண்டும். அனை வருக்கும் தையல் தைப்பதற்கான துணி களை சமமாக வழங்க வேண்டும். தையல்  கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட  வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கும் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் வீடு கள் வழங்க வேண்டும். தையல் தொழிலா ளர்களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் அரசு வழங்கிட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பேரவையில் சங்கத் தலைவராக ஜி. மோகன், பொதுச்செயலாளராக பி.சித்ரா,  பொருளாளராக எம்.சிவபெருமாள், துணைத் தலைவர்களாக கே.கலையரசி, எம்.எஸ்.லீலாவதி, ஆர்.சுதா, சத்யா,  இணைச்செயலாளர்களாக சி.ராஜமாணிக் கம், எஸ்.விஜயராணி, ஐ.ஆயிஷா அம் மாள், ஜி.நாகலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.