districts

மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்திட சிபிஎம் கோரிக்கை

மதுரை, நவ.5-  மதுபோதையில் அரசு மற்றும் தனி யார்  மகளிர் கல்லூரிகளில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.   மதுரை மீனாட்சி அரசு கலை கல்  லூரி சாலையில் புதனன்று  மாலை  இராஜாஜி அரசு மருத்துவமனையிலி ருந்து அமரர் ஊர்தி சென்றது.அப்  போது ஊர்தியின் முன்பாக இளை ஞர்கள் சிலர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பிய வாறு அதி வேகத்தில் , ஆபாசமான வார்த்தைகளில் கூச்சலிட்டபடி சென் றுள்ளனர்.  கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் செய லால் அச்சமடைந்தனர். இந்நிலையில் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டபோது  மாணவி ஒருவரின் தந்தை, ஏன் இப்படி செய்கிறீர்கள். மாணவிகள் பயப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது போதை கும்பல் மாணவியின் தந்தை யை தாக்கியதோடு, கல்லூரி வளா கத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்த காட்சி  சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்  படுத்தியது..

இதுகுறித்து வீடியோ காட்சிகளின் அடிப்படையில் செல்லூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.  மதுபோதையில் மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்ட மதுரை  அச்சம்பத்து பகுதியை சேர்ந்த  ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவ ஞானம், நாகப்பிரியன், சதீஸ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் மீது 6 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மதுரை மாநகர் பகுதியில் தொடர்ந்து  மகளிர் கல்லூரி முன்பாக மாணவி களை அச்சுறுத்தும் சம்பவம் அதிக ரித்துவருகிறது. அக்டோபர்  30 ஆம்  தேதி தேவர் ஜெயந்தி அன்று மதுரை  மாநகர் நரிமேடு பகுதியில் உள்ள லேடி டோக் கல்லூரி வளாகத்திற்குள்  இளை ஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்து டன்  அத்து மீறி நுழைந்தும், அங்கு பாது காப்பு பணியில் இருந்த பாதுகாவலர் பூமி என்பவரை தாக்கியும், இரு சக்கர  வாகனத்தினை அவர் மீது ஏற்ற முயன்  றுள்ளனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், அநாகரிகமாக நடந்து கொண்  டுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களிலும் பதி விட்டு்ள்ளனர் இதனையடுத்து  கல்லூரி கண்கா ணிப்பாளரான பூப்பாண்டி என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

 மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த சூரியா, முத்துநவேஷ், கோ.புதூரை சேர்ந்த அருண்பாண்டியன், மணி கண்டன்,சேதுபாண்டி,  பா.மணிகண் டன், ஆத்திகுளம் முத்து விக்னேஷ், காந்திபுரம், வில்லியம் பிரான்சிஸ், காந்திபுரம் விமல்ஜாய் பேட்ரிக் ஆகிய 9 இளைஞர்களை தல்லாகுளம் காவல்  துறையினர் கைது செய்தனர். 

கல்லூரி அருகே காவல்துறையினரை நிறுத்திடுக!

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்  டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில், தொடர்ந்து இதுபோன்ற சம்ப வங்கள் பெற்றோர் மற்றும் மாணவி களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்  இந்த சம்பவங்கள் குறித்து சட்டரீதியாக உரிய நடவடிக்கையை குற்றவாளிகள் மீது காவல்துறையினர்  எடுக்க வேண்டும்.  இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாத வண்ணம் மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கல்லூரி  அரு கில் காவல்துறையினரை பாதுகாப் பிற்கு நிறுத்த வேண்டும். தேச தலை வர்களின் நினைவு நாளில் மற்றும் பிறந்த நாளில் ஒரு இறுதி ஊர்வல நிகழ்ச்சி யில் என்று சில சமூகத்தினர் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் கூச்சலிட்டுக் கொண்டு செல்வது அந்த தேசத் தலை வர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்டார்கள் என்பதை மறந்து  அவர்களை ஒரு சாதிய கண்ணோட்டத் தோடு மக்களை பார்க்க வைக்கும் போக்கு உருவாகிறது. எனவே வரும்  காலங்களில் இது போன்ற செயல்களை  தடுக்க காவல்துறையும் அரசு நிர்வாக மும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.