சின்னாளப்பட்டி, ஆக.25- சின்னாளப்பட்டி அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் எதிரில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண வர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழ கத்திற்கு தேர்வு எழுத வந்த பி.டெக் முதலா மாண்டு மாணவர் வீர கார்த்திக் திங்களன்று (ஆக.21) திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை யை கடக்க முயன்றபோது கார் மோதியதில் படுகாயமடைந்தார். இவரை மீட்டு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வியாழ னன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் வெள்ளியன்று சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 4 வழி சாலைக்கு திரண்டு வந்த னர். பின்னர் பல்கலை., நுழைவாயிலில் அமர்ந்து கோஷம் போட்டனர். தகவல் அறிந்து வந்த அம்பாத்துறை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சாலை கடக்கும் போது நடந்த விபத்துகளில் இதுவரை 12 மாண வர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் வரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 4 வழி சாலையில் நடை பாதை மேம்பாலம் அமைக்க வேண்டும். இரண்டு புறமும் நிழல் குடை அமைக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாணவர்கள் உடன்பட்டனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் எதிரிலும் மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பல்கலை., பதிவாளர் ராதாகிருஷ்ணன் (பொ) தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.