திண்டுக்கல், ஏப்.29- திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் முன்பு கியூட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சர்வகட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நுழைவு தேர்வு கொண்டு வந்தது போலதற்போது கலை அறிவியல் கல்லூரிகளிலும் நுழைவதற்கு கியூட் எனும் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 66 மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு முறை நடைபெறவுள்ளது. இதற் காக ஆன்லைன் மூலம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நுழைவு தேர்வு கட்டணமாக பொ துப்பிரிவினருக்கு ரூ.650, ஓபிசிக்கு ரூ.600, பட்டியலினத்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.550ம், இந்தியா விற்கு வெளியே நடத்தப்படும்தேர்வு களுக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 547 நகரங்களி லும், வெளிநாடுகளில் 12 நகரங்களிலும் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த தேர்வு முறை மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி கடுமையாக பாதிக்கப்படு கிறது. மேலும் காந்திகிராம பல்கலைக்கழ கம் ஒரு நிகர் நிலை பல்கலைக்கழ கம். கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அமைக்கப் பட்ட கிராமிய பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் மத்திய பாடத்திட் டத்தின் கீழ் தேசிய நுழைவுதேர்வு அமல்படுத்தப்படுமானால், தமிழக ஏழை மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனை கண்டிக்கும் வகையில் காந்தி கிராமம் பல்கலைக்கழக முன்பு மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்கலைக்கழக வளாக நுழை வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏவும், மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கே.பால பாரதி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் அப்துல்கனிராஜா, மாநகர் மாவட்டச் செயலாளர் டி.மணிகண்டன்,
மதிமுக மாவட்டச் செயலாளர் என். செல்வ ராகவன். சின்னாளபட்டி திமுக பேரூர் கழக செயலாளர் எஸ்.ஆர்.முருகன், சிபிஐமாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன், தந்தை பெரியார் திராவிடர் கழக தென்மண்டல செயலா ளர் சம்பத், சிபிஐஎம்எல் விடுதலை கட்சியின் மாவட்டச் செயலாளர் பொன்னுதுரை, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரோக்கஸ்வளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக்பரீத், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செய லாளர் அந்தோணி, ஆதித்தமிழர் பேர வையின் மாநில கொள்கை பரப்புச் செய லாளர் சுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையடுத்து போராட்டத் தலைவர்கள் கே.பால பாரதி,ஆர்.சச்சிதானந்தம், அப்துல் கனிராஜா, என்.செல்வராகவன், எஸ். ஆர்.முருகன் ஆகியோர் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரெங்கராஜனை சந்தித்து கியூட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய பாஜக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக துணை வேந்தர் ரெங்க ராஜன் தெரிவித்தார்.