districts

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக பொருளாதார அசமத்துவம் மிகவும் மோசமாக உயர்கிறது. டாலர் பில்லியனர்கள் எனப்படும் வெறும் 142 பேரின் சொத்து 55.5 கோடி மக்களின் சொத்துக்களைவிட அதிகம்! டாலர் பில்லியனர்கள் முதல் 98 பேரின் சொத்தும் சாதாரண மக்களில் 40 சதவீதம் பேரின் அதாவது 55 கோடி பேரின் சொத்தும் சமம். ஒரு புறம் மக்களின் துயரங்கள் பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கின்றன. மறுபுறம் மெகா பணக்காரர்கள் செல்வத்தை வளைத்து போட்டு கொழுக்கின்றனர். மோடியின் கொள்கைகளை தோற்கடிக்க ஒன்றுபடுவோம்.

2020 ஆம் ஆண்டு 4.6 கோடி இந்தியர்கள் புதியதாக வறுமையில் வீழ்ந்தனர். உலகில் உருவான புதிய ஏழைகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். இதே நேரத்தில் டாலர் பில்லியனர்கள் அதாவது ரூ 7500 கோடிக்கும் அதிகமான சொத்து உடையவர்களின் எண்ணிக்கை மோடியின் கொள்கைகள் காரணமாக 102லிருந்து 143 பேராக உயர்ந்தது.  இந்தியாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

செய்தி: 2021-22 நிதியாண்டின் 4 ஆவது காலாண்டில் வளர்ச்சி மேலும் சரியும்; சிறு, குறு தொழில்கள்  பாதிக்கும்! இது அபாயச் சங்கு! கூடுதல் வேலையின்மை/வறுமை/துன்பங்கள் தாக்கப்போகின்றன என பொருள்.  வேலை இழப்போருக்கு வேலையில்லா நிவாரணமும் வருமான வரி வரம்புக்கு வெளியே இருக்கும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மாதம் ரூ.7500 மற்றும் இலவச உணவு பொருட்கள் உடனடியாக தர மோடி அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.