தூத்துக்குடி,நவ.23 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்த ஒரு நாள் உள்வளாக பயிற்சி நடை பெற்றது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமான மீன் வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறையில் “நன்னீர் மீன் வளர்ப்பு” குறித்த உள் வளாக பயிற்சி 18.11.2022 முதல் 22.11.2022 வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, நன்னீர் மீன் வளர்ப்பின் பல்வேறு அம்சங்கள் அதாவது கலப்பு கெண்டை வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, மீன் தொட்டியை உரு வாக்குதல் மற்றும் அமைத்தல், பண்ணையில் மீன் தீவனம் தயாரித்தல் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு ஆகியவை பயிற்சியா ளர்களுக்கு கற்பிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற மாணவர்க ளுக்கு காணொளி காட்சி காண் பிக்கப்பட்டது. மேலும், பயிற்சி யாளர்கள் தீவனம் தயாரித்தல், மீன் தொட்டி மற்றும் அமைப்பு செயல் விளக்கம் குறித்த செயல் விளக்க மும் செய்து காண்பிக்கப்பட்டது. விருதுநகர் வி.வி வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில் இருந்து மொத்தம் 8 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி முதல்வர் அகிலன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பேராசிரியர் மற்றும் மீன் வளர்ப்பு துறை தலைவர், சா.ஆதித்தன் இப்பயிற்சியை விரிவாக நடத்தினார். இப்பயிற்சியைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள “பேரா சிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628 008. அலைபேசி எண் (09442288850) மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்” என மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.