மதுரை, ஜூலை 30- மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் ஏற்பாட்டில் வேலம்மாள் மருத்துவமனையுடன் இணைந்து ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் சேது ராஜன் பத்மா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஞாயி றன்று நடைபெற்றது முகா மினை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் துவக்கி வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், பகு திக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், கிளைச் செயலாளர்கள் அப்துல்லா, மாரிகனி, உடையார், மணி வண்ணன் மற்றும் மருத்துவ மனை செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி மனோஜ், பள்ளி தாளாளரும் மருத்துவருமான சுப்ரஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20 பேர் கொண்ட மருத்து வக்குழுவினர் முகாமில் பங்கேற்று பொதுமக்க ளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பி யல், காது, மூக்கு தொண்டை, மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்து வம், கண், நுரையீரல், பல் மருத்துவம் உள்ளிட்ட பரி சோதனை மற்றும் ஆலோ சனைகளை மருத்துவர்கள் வழங்கினர். மகப்பேறு தாய்மார்களுக்கு அல்ட்ரா ஸ்கேன் வசதி, கண் பரி சோதனை செய்யும் நபர் களுக்கு தேவையான ஆலோ சனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை போன்ற வைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.