districts

img

21 திருநங்கைகள் உட்பட 48 பேருக்கு இலவச பட்டா வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்

விருதுநகர், டிச.11- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த  21 திருநங்கைகள் மற்றும் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த 27 சிறுபான்மை யின குடும்பங்களுக்கு  ரூ.16 இலட்சம் மதிப்பிலான இல வச வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர்  தனுஷ் எம்.குமார்  முன்னிலை வகித்தார்.  மேலும் இதில், விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன்,  ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன்(சிவகாசி), அனிதா (சாத்தூர்), வட்டாட்சியர்கள் ரங்கநாதன், உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.