மதுரை, மே 9- தமிழ்நாடு ஊறுகாய் பொட்டல உற் பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி. குருநாதன் (66) உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிறன்று மாலை மதுரை யில் காலமானார். இவர் ஒன்பது ஆண்டுகளாக இச்சங்கத்தின் தலைவராக இருந்து செயல் பட்டு வந்துள்ளார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், செயலாளர் கந்தசாமி, பொரு ளாளர் அஜ்மல்கான் மற்றும் நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களனறு செல்லூர் அய்யனார் கோவில் தெருவில் உள்ள அவரது இல் லத்தில் நடைபெற்றது.