மதுரை, டிச.21- ரயிலில் முன்முடிவாகத் தீர்மா னிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு நாளி தழுக்கும், தண்ணீர் பாட்டி லுக்கும் வலுக்கட்டாயமாக 20 ரூபாய் வசூலிக்கப்படுவது பய ணிகளை எரிச்சலூட்டியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயிலில் ஒரு வர் பயணித்துள்ளார். பயணி களின் விருப்பமின்றி வலுக்கட்டா யமாக நாளிதழுக்கும், தண்ணீர் பாட்டிலுக்கும் கட்டணம் வசூ லிக்கப்படுவது குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் விரிவாகப் பதி விட்டுள்ளார். இது சமூக ஊடகங் களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதுதொடர்பாக, டிஎம் மூர்த்தி கூறிதாவது: “டிசம்பர் 18ஆ-ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து தேஜஸ் விரைவு ரயில் மூலம் மதுரைக்குப் பயணித்தேன். ரயிலில் ஏறியவுடன் எனது இருக் கையில் தண்ணீர் பாட்டிலும், தமிழ் நாளிதழும் இருந்தன. மற்ற இருக்கைகளிலும் இவை இருந்தன. குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் நால்வருக்கும் ஒவ்வொரு நாளிதழ் வழங்கப்பட் டன. ரயில் டிக்கெட் பரிசோதகர் நாளிதழுக்கும் தண்ணீர் பாட்டி லுக்கும் 20 ரூபாய் கேட்டார்.
நான் இவற்றைக் கேட்க வில்லை என்று கூறி மறுத்ததால், பயணிகள் பட்டியலைக் காண் பித்து, அனைத்துப் பயணிகளிட மிருந்தும் வசூலிக்கக்கோரி அறி வுறுத்தப்பட்டுள்ளதாக டிக்கெட் பரிசோதகர் கூறினர். நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், மற்றவர்களிடம் வசூலிக்கச் சென்றுவிட்டார்” என்றார் மூர்த்தி. இந்த நடைமுறையைத் தடுப் பதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வுக்கு மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ரயில் பயணி கள் சங்கத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஜெனி கூறியதாவது:- “பயணிகளின் விருப்பத் துக்கு மாறாக நாளிதழ்களை வாங்கக் கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. குறைந்தபட் சம், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் விருப்பத்துக்கேற்ப நாளிதழ்களைத் தேர்வு செய்வ தற்கான வாய்ப்பையாவது பய ணிகளுக்கு ரயில்வே கொடுக்க வேண்டும்” என்றார். இந்த சர்ச்சைத் தொடர்பாக ஐஆர்சிடிசி இணை பொதுமேலா ளர் கிளாட்ஸ்டோன் டேவிட் கூறி யதாவது:- “ரயில் வாரியக் கொள்கை யின்படி தேஜஸ் விரைவு ரயிலில் குடிநீரும், நாளிதழும் வழங்கும் நடைமுறை டிசம்பர் 17-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு நாளிதழை வாங்க வேண்டும் என பயணிகள் கட்டா யப்படுத்துவதாக வரும் தகவல் களில் உண்மையில்லை. பல் வேறு நாளிதழ்களிலிருந்து ஏதே னும் ஒன்றைத் தேர்வு செய்வதற் கான வாய்ப்பு பயணிகளுக்கு உள்ளது” என்றார் அவர். ரயில் டிக்கெட் பரிசோதகர் களுக்கு டிசம்பர் 17-ம் தேதி வழங் கப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்ற றிக்கையின்படி, “ரயில் எண் 22671/22672 தேஜஸ் விரைவு ரயிலில் பயணிகளுக்குத் தண் ணீர் பாட்டிலும், நாளிதழும் கட்டா யம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.