districts

கஞ்சா கடத்திய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

தேனி ,ஜூன் 1-

     தே னியில் 21 கிலோ கஞ்சாவுடன்  பிடிபட்ட வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை ,ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

     தேனி அல்லிநகரம் பாண்டி கோவில் மலை அடிவாரத்தில்  கடந்த 2021 ஆம் ஆண்டு  பெரியகுளம் கூர்மையா கோவில் தெருவை சேர்ந்த சின்னராஜா மகன் பிரபாகரன் (வயது 24), சுருளிமணி மகன் ராம்குமார் (27)  ஆகியோர் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 21 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர் . இதுதொடர்பான வழக்கு மதுரை  போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி செங்கமலச்செல்வன்  தீர்ப்பு கூறினார்.

    அதில்  பிரபாகரன், ராம்குமார் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.