பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை கே.சி.அருள்ஜோதி தலைமை வகித்தார். பழனி நகர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வி .செல்லத்துரை கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து உரையாற்றினார். 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.