ஆடி 18-ஆம் பெருக்கு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
மதுரை, ஜூலை 31- ஆடி பௌர்ணமி; ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல் மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்க ளான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களிலிருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு மொத்தம்-சில்லறை வியா பாரம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்க ளாக மல்லிகைப் பூ ரூ.300-க்கு விற் பனை செய்யப்பட்ட நிலையில் ஆடி பௌர்ணமி மற்றும் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு இரு மடங்காக உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ300, செவ்வந்தி மற்றும் அரளி கிலோ ரூ.250, பட்டன் ரோஸ் கிலோ ரூ.250-க்கு விற்பனையானது. வரும் நாட்களில் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரி கள்.
இராமேஸ்வரத்தில் கடைகள் அடைப்பு
இராமேஸ்வரம், ஜூலை 31- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் இணை ஆணை யரை மாற்றக் கோரி மக்கள் பாது காப்புப் பேரவை சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ,ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையராக செ.மாரியப்பன் பொறுப்பு வகிக்கிறார். பொறுப்பேற்ற வுடன் சிறப்புத் தரிசனக் கட்ட ணம் உயர்த்தப்பட்டது. தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் வச திக்காகப் பல்வேறு இடங்களில் தடுப்பு அமைத்துள்ளதால் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த கோவிலில் சில இடங்களை உடைத்து கட்டுமானப் பணி செய் வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இணை ஆணையரின் நடவ டிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் திங்கட்கிழமை முழு அடைப்பு பொது வேலை நிறுத் தம் அறிவிக்கப்பட்டது. போராட்டம் காரணமாகக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் மூடப்பட்டன. டீ கடைகள் அடைக்கப்பட்டிருந்த தால் டீ குடிக்க முடியாமல் கோவி லுக்கு வந்தவர்கள் தவித்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து விசைப்படகுகளில் கட லுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் செல்லவில்லை.
தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்
இராமேஸ்வரம், ஜூலை 31- இலங்கையில் தொடரும் பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு காரணமாக வாழ முடியாமல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படகு மூலம் அகதிகளாகத் தனுஷ்கோடிக்குத் திங்கட்கிழமை வந்தனர். தனுஷ்கோடியில் இலங்கை அகதிகள் இருப்பதாகக் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறைக்குக் கிடைத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் அகதிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பிரதீப்குமார் (36), அவரது மனைவி மேரி (36), மகள்கள் கிருத்திகா (7) ஸ்கிரிமிதா(4) என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு பேரையும் மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
மதுரை, ஜூலை 31- மதுரையில் நிதி நிறுவனத்தினர் வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாகக் கூறி மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். மதுரை பெத்தானியாபுரம் நாகுநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமணியம்மாள் என்பவர் விக்னேஷ் குரு என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கட னுக்காகக் கூடுதல் அபராதத்துடன் ரூபாய் நான்கு லட்சம் கட்டவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாகக் கூறி சிறுமணியம்மாள் மாற்றுத்திறனாளி மகளான கவிதா-வுடன் திங்களன்று மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். தற்கொலைக்கு முயன்றவரை தல்லாகுளம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
இராமேஸ்வரம், ஜூலை 31- இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான ஒன்பது கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் திங்கட்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்.
அனுமதி பெறாத வெடிகளைத் தயாரித்தவர்கள் மீது வழக்கு
வெம்பக்கோட்டை, ஜூலை 31- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கங்கரக்கோட்டையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை யில் அனுமதி பெறாத பட்டாசு வெடிகளைத் தயார் செய்த இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கரக்கோட்டை பகுதியில் ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியா ருக்குச் சொந்தமான ஸ்ரீசெல்வி பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர். இதில், அரசு அனுமதி பெறாத பேன்சி ரக வெடிகள், உயர் ரக வெடிகள் தயார் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெடி களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஜெகன் குமார் (30) என்பவரைக் கைது செய்தனர். சுந்தரமூர்த்தி என்பவரைத் தேடி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
தேனி, ஜூலை 31- தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ராசிங்காபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்களன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முடித்து வைத்த நீதிபதி எஸ்.கோபிநாதன் குற்ற வாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவில்லிபுத்தூர், ஜூலை 31- கற்றலின் ஆற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவிற்கு கணினி, பிரிண்டர் வழங்கும் விழா திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் கற்றலின் ஆற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவிற்கு கணினி, பிரிண்டர் வழங்கும் விழா,ஊரணிபட்டி நகராட்சி நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முருகதாசன் தலைமை வகித்தார். செயலாளர் டி.வி. கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக முத்தையாபிள்ளை கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக மாவட்டச் செயலாளர் ஆறுமுகபாண்டியன், ராஜசேகர், என்.எஸ்.வேலா யுதம், ஜாகிர் உசேன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
11-ஆம் வகுப்பு மாணவர் மாயம்
நத்தம், ஜூலை 31- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ள வி.எஸ்.கோட்டை ஊராட்சி சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜூலை 19-ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. சிறுவனின் பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இதையடுத்து சிறுவனின் தயார் செல்வி அளித்த புகாரின் பேரில் சாணார் பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவில்லிபுத்தூர் நகர்மன்றக் கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவில்லிபுத்தூர், ஜூலை 31- திருவில்லிபுத்தூர் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நகர் மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடை பெற்றது. ஒரு நாள் கூட்டத்தில் மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஏழாவது வார்டு உறுப்பினர் ராஜா மான்சிங் அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் வைத்துத் தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் வந்த ராமன் அண்ட் கோ நிறுவனம் ஏன் பணியிலி ருந்து விலகியது எனக் கேள்வியெழுப்பி னார். அவுட்சோர்சிங் டெண்டர் ரத்து அதற்குப் பதிலளித்த ஆணையர், டெண்டர் விதிமுறைகளின் படி உரிய நபர் களைக் கொண்டு பணிகள் செய்யவில்லை பெயருக்கு 35 பேர் 40 பேரை வைத்துக் கொண்டு பணிகள் செய்தனர் ஆங்காங்கே குப்பைகள் தேங்கக் கூடிய நிலைமை ஏற் பட்டது இதையடுத்து அந்நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஒரு வார காலம் அவகாசமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் டெண் டர் ரத்துச் செய்யப்பட்டுத் தற்காலிகமாக ஏற்கனவே பணிகளைச் செய்து வந்த எக்ஸ்னோரா நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றார். விளம்பரங்களில் புகைப்படம் மிஸ்சிங் இரண்டாவது வார்டு உறுப்பினர் பேசு கையில், ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு அனைத்து நாளிதழ்களிலும் நகர் நிர்வா கத்தின் சார்பில் விளம்பரம் கொடுத்துள்ளீர் கள் விளம்பரத்தில் எங்களது புகைப்பட மும் பெயரும் இருந்தால் நல்லது என்றார். அதற்குப் பதிலளித்த தலைவர் வரும் காலங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு அவர் வழிகாட்டலின் அடிப்படையில் உங்க ளது கோரிக்கையை அமல்படுத்துவோம் என்றார். தமிழ்நாடு அரசு திருவில்லிபுத்தூர் நக ராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள வாருகால்களையும் புதிதாகக் கட்டுவ தற்கு 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்ற தக வல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நகர்மன்ற துணைத் தலைவர் செல்வ மணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், இளநிலைப் பொறியாளர், குடிநீர் விநி யோக மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தல்; கணவர் மீது வழக்கு
சாத்தூர், ஜூலை 31- கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன் புறுத்திய மூன்று பேர் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெருப் பகுதியைச் சேர்ந்தவர் செண் பகாதேவி (31). இவருக்கும் மதுரை சொக்க லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் வீட்டார் சார்பில் 57 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராகேஷ் தொழில் தொடங்க செண்பகாதேவி, தான் அணிந்தி ருந்த 30 பவுன் நகையைக் கொடுத்தாராம். ஆனால் ராகேஷ் எவ்விதமான தொழிலும் தொடங்கவில்லையாம். இதுபற்றிக் கேட்டபோது, நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தாராம். மேலும், கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு சித்தி ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. செண்பகாதேவி இதுகுறித்துச் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் கூடுதல் வர தட்சணை கேட்டு சித்திரவதை செய்த கண வர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மதுரை பரவையில் தெருநாய்கள் தொல்லை
மதுரை, ஜூலை 31- பரவையில் தெருநாய் தொல்லையைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தி பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பரவை ஏஐபிஇஏ நகரைச் சேர்ந்த என்.செந்தில் குமார் என்பவர் பொது நல மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அதிகாரிகளுக்கு நோட் டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து மனுதாரர் கூறியதாவது: சமீப காலமாக மதுரையில் தெருநாய்கள் மக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. சமீபத்தில், ஒரே நாளில் ஐந்து நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் குறித்து விண்ணப்பம் மூலம் தகவல் கேட்டி ருந்ததாகவும், சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அதிகாரியின் பதிலின்படி, மொத்தம் 2,245 நாய்க் கடியால் பாதிக்கப் பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனையில் 663 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 30 பேர் பரவை மற்றும் ஏஐபிஇஏ நகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறை யிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றார். உரிமம் இல்லாமல் நாய்களை வளர்ப்பவர்கள் மீது எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ் வப்போது தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவேண்டும். தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
நவீனமாகிறது சின்னாளபட்டி பேருந்து நிலையம்
சின்னாளபட்டி, ஜூலை 31- சின்னாளபட்டி பேருந்து நிலையத்தை நவீனமாக மாற்ற ஒப்புதல் கிடைத்துள்ளதாகப் பேரூராட்சித் தலைவர் திங்களன்று தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியின் கூட்டம் திங்களன்று தலைவர் பிரதீபா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் செல்வராஜ், துணைத் தலைவர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, கணக்காளர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சின்னாளப்பட்டி பேரூராட்சிப் பேருந்து நிலையம் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 10-ஆம் தேதி கோரப்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளைச் செவ்வாய் மாலைக்குள் பேரூராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடம் மற்றும் சௌடேஸ்வரி காலனியில் உள்ள சமுதாயக்கூடம் 15-ஆவது நிதிக் குழுத் திட்டத்தில் புணரமைக்கப்பட்டுள்ளது. சமுதாயக் கூடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அன்றைய சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயம் செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படக்கூடாது”
திண்டுக்கல் ஜூலை 31 சாலையோர வியாபாரி களின் பாதுகாப்புச் சட்டத் திற்கு விரோதமாக சாலை யோர வியாபாரிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் அப்புறப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என தமி ழக அரசுக்கு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கேண்டுகோள் விடுத்துள்ள னர். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்களன்று திண்டுக்கல்லில் நடை பெற்றது ஒருங்கிணைப் புக்குழு உறுப்பினர் சந்தி யாகு தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கருப் பையன், துணைத் தலை வர் தெய்வராஜ், ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பி னர்கள் எஸ்.செல்வி, ஏ. பிச்சைமுத்து, சி.பி. ஜெய சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சாலையோர சிறுவியா பாரிகளுக்கு அரசு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லாக் கடன் ரூ.15,000 வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை கிராம ஊராட்சி கள் அளவில் அமல்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் விற்பனைக் குழுவுக்கான தேர்தலை நடத்த வேண்டும். நகர் விற்பனைக் குழுவில் மூன்றில் இரு பங்கு சாலை யோர வியாபாரிகள் பங் கேற்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலை யோர வியாபாரிகள் பாது காப்புச் சட்டத்திற்கு விரோ தமாக சாலையோர வியா பாரிகளை மாநகராட்சி, நக ராட்சி நிர்வாகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை காவல் துறை அதிகாரிகள் வலுக் கட்டாயமாக அப்புறப்படுத் துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
மானாமதுரை நகராட்சியில் சாலைகளைச் சீரமைக்க ரூ.160 லட்சம்
சிவகங்கை, ஜூலை 31- சிவகங்கை நகர்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவர் மாரி யப்பன் கென்னடி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுந்தரம், பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, “மானாமதுரை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 25 தார் சாலை, சிமெண்ட் சாலைகளை ரூ.160 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளது என்றார். மேலும் அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சியில் ஐந்து பொதுக் கழிப்பிடங்கள், ஏழு சமுதாயக் கழிப்பிடங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் உறுப்பினர் புருஷோத்தமன் பேசுகையில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குக் கழிப்பறை கட்டு வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி கடந்த ஓராண்டாகப் பயன்படுத்தப்பட வில்லை. கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும். சிஎஸ்ஐ வளாகத்திற்குள் குடிதண்ணீர் எளிதாகக் கிடைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.