நத்தம், ஏப்.30- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி-பூசாரிபட்டியில் உள்ள கேசரி கண்மாயில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டா ரங்களிலிருந்தும், வெளிமாவட்ட பகுதிகளிலிருந்து ஏராமானோர் வந்து ரூ.200 கட்டணம் செலுத்தி கண்மாயில் இறங்கி வலை, கூடைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.இதில் விரால், கட்லா, கெண்டை, ஜிலேபி உள்பட பல ரக மீன்கள் பிடிபட்டன.