விருதுநகர், ஜன.30- விருதுநகர் அருகே பட்டாசுக் கழிவுகளை எரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலா ளர்கள் உடல் கருகி உயிரிழந்த னர். மற்றொரு தொழிலாளி படு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விருதுநகர் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி புதூரில் சிவகாசியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட் டாசு ஆலை செயல்பட்டு வரு கிறது. இந்த ஆலையில் ஏராள மான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை பட்டாசு ஆலையில் இருந்த கழிவு பட் டாசுகளை தொழிலாளர்கள் சிலர் எரித்தனர். அப்போது அதில் கிடந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சித றின. இதில் பட்டாசு ஆலை தொழி லாளியான சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்து சம் பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான அம்மன்கோவில்பட்டி புதூரை சேர்ந்த குபேந்திரன் (28), சிவ காசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வேந்திரன் ஆகிய இரு வரும் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். படுகாயம டைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குபேந்திரன், தெய்வேந்திரன் ஆகிய இருவ ரும் விருதுநகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குபேந்திரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தெய்வேந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ ருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து செய்து விசா ரணை நடத்தினர். இதுதொடர் பாக பட்டாசு ஆலையின் உரிமை யாளரான செல்வம் மீது 4 பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்த னர்.