அனுமதியின்றி இயங்கிய பட்டாசுக் கடைக்கு சீல்
சிவகாசி, நவ.2- விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அற்புதகுமார். இவர், பி.கே.எஸ்.ஏ.ஏ சாலையில் பட்டாசு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பட்டாசுக் கடைக்கு தேவையான பட்டாசுகளை ஆலைகளில் இருந்து வாங்கி, அதை உரிமம் இல்லாத குடோனில் பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிவகாசி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் காளிசரண், சிவகாசி கிழக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ்ராஜா உள்ளிட்டோர் குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது, பட்டாசுகளை இருப்பு வைப்பதற்கான உரிமம் இல்லாமல் பெட்டி, பெட்டியாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உரிய அனுமதி இல்லா மல் இயங்கிய பட்டாசுக் கடை குடோனுக்கு அதிகாரி கள் சீல் வைத்ததோடு, கடை உரிமையாளர் அற்புத குமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
உரிமம், அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர்கள் மீது வழக்கு
சிவகாசி, நவ.2- சிவகாசி அருகே உள்ளது தெய்வானை நகர். இங்கு தனி வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பட்டாசுக் கடையின் அருகே தனி கட்டி டத்தில் அனுமதியின்றி பலதரப்பட்ட வெடிகள் வைத்தி ருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் (58) சிவ காசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் ஏ.வி.டி தெற்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர். மேலும், ஆர்.எஸ்.ஆர்.நகர் அருகே உரிமத்தை புதுப்பிக்காமல் பட்டாசு கடை நடத்தி வந்த பாலாஜி என்பவர் மீது கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் மற்றொரு இடத்தில் 2 லட்சம் மதிப்பி லான பலதரப்பட்ட வெடிகளை வைத்திருந்த விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிவகாசி கிழக்கு காவல்துறையினர் ரோந்து சென்ற போது முருகன் காலனியில் தகர செட்டில் வெடி தயாரித்த நாரணாபுரத்தைச் சேர்ந்த சங்கர், கலாவதி ஆகி யோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் திருத்தங்கல் காவல்துறையினர் ரோந்து சென்றபோது, எஸ்.என்.புரம் பகுதியில் தகர செட்டில் பட்டாசுகளை தயார் செய்ததாக ஜெயபால் (35), கணே சன் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிபிஎம் பெண்கள் கிளை அமைப்பு
திருச்சுழி, நவ.2- திருச்சுழி அருகே உள்ள சிறுவனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் கிளை அமைக்கப் பட்டது. சிறுவனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதிய கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், வட்டச் செயலாளர் சி.மார்க்கண்டன், செல்வக்குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர். கிளைச் செயலாளராக எ.அழகு தேர்வு செய்யப்பட்டார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதானிக்காவே மோடியும், அமித்ஷாவும் பணிபுரிகின்றனர் ப.மாணிக்கம்தாகூர் எம்.பி குற்றச்சாட்டு
விருதுநகர், நவ.2- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படா மல், அதானிக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரி வித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந் தித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘விருது நகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், இராஜபாளையத்தில் இ.எஸ்.ஐ மருத்துவ மனை உள்ளது. விருதுநகர் மற்றும் இராஜ பாளையத்தில் உள்ள மருத்துவமனை களில் உள் நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற முடியாது. வெளிநோயாளி கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே சிகிச்சை பெற முடியும். அதேவேளை, விருதுநகர் மாவட்டத் திற்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு சிவகாசியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையில் ஆய்வு செய்தது. அப்போது, அங்கு உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மிகவும் மோசமான இருந்ததை அக்குழு பார்வையிட்டுள்ளது. எனவே அங்கிருந்த குறைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். அங்கு என்ன பிரச்சனை உள்ளது அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும். அங்கு, ஒன்றிய அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகளை செய்திட நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்பேன். பாஜகவினர் கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றுகின்றனர் என்ற கேள்விக்கு? தமிழ்நாட்டில் 100 நாள் வேலை செய்த 90 லட்சம் பெண்களுக்கு 2500 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுக்கிறது. அதைப்பற்றி பாஜகவின ருக்கும் அண்ணாமலைக்கும் கவலை யில்லை. அவர்களது கட்சிக் கொடிக்கம் பத்தை நடுவது தான் நாட்டில் முக்கிய மான பிரச்சனையா? நாட்டு மக்களை திசை திருப்பவே இதுபோன்ற செயலில் பாஜக வினர் ஈடுபடுகின்றனர். ஒட்டு கேட்கும் மோடி அரசு பொதுத்துறை சொத்துக்களை பிரத மர் மோடி, அதானிக்கு விற்பனை செய்கி றார் என யாராவது பேசினால், அவர்களது செல்போன்களை ஒட்டு கேட்கப்படும். இது போன்ற மோசமான காரியத்தை பாஜக செய்து வருகிறது. பாஜகவின் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அதானிக்கா கவே வேலை செய்து வருகின்றனர். நாட்டு மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தவித மான கவலையும் கிடையாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனித்து விடப்பட்ட கட்சியாக பாஜக உள்ளது. தமி ழகத்திற்கு விரோதமாக உள்ளது. எனவே, இந்தக் கட்சியோடு யாரும் சேர்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர்’’ என தெரி வித்தார்.