தூத்துக்குடி, பிப்.3- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி, புதூர் பேரூராட்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் நகர்ப் புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவில்பட்டி நக ராட்சிக்குட்பட்ட 5 வார்டில் வியாழனன்று 4 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்யப் பட்டது. 6 ஆவது வார்டு முத்துராஜ், 10 ஆவது வார்டு முத்துலட்சுமி, 18 ஆவது வார்டு விஜயா, 27 ஆவது வார்டு ஜோதிபாசு, ஆகி யோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத்தாக்கலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் புதூர் பேரூ ராட்சிக்கு உட்பட்ட 12 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் ராஜேஸ் வரி, 14 ஆவது வார்டில் ப. ஆண்டி ஆகியோர் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் புவிராஜ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, ராம லிங்கம், மேல அருணாசல புரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக சுந்தரம், நாகலாபுரம் கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வீரமுத்து, புதூர் கிளை செய லாளர் செந்தில் வேல், ஆட்டோ நிர்வாகி முத்து பாண்டி, திமுக சார்பில் சொக்கலிங்கம், உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.