தேனி, ஏப்.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தேனி மாவட்டத்தில் தமிழக அர சின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறுத் துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் அரசு விழா ஏப்ரல் 30 அன்று நடைபெறவுள்ளது.விழா நடைபெறுகிற தேனி அன்னஞ்சி புற வழிச்சாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கூட்டு றவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஏப்ரல் 23 சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தலைமை யில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராம கிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, கூட்டுற வுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலு வலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளவுள்ள அரசு விழா குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டு, அனைத்துத்துறை களின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவி கள் வழங்குவது தொடர்பாக துறை அலு வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல் வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வரு வாய் அலுவலர் தி.சுப்பிரமணியன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகருக்கு முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 30-ஆம் தேதி வருவதை யொட்டி அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்று வரும் மேடை அலங்காரப் பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பி னர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துணை மேயர் ராஜப்பா, திமுக ஒன்றியச் செய லாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற் றனர்.