districts

img

கொள்முதல் செய்யப்படாமல் குவியல் குவியலாக காத்திருக்கும் நெல்மணிகள் முளைத்து வீணாவதாக விவசாயிகள் கண்ணீர்

மதுரை, ஜன.5- மதுரை மாவட்டம் மேலூர் பகுதி யில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஒருபோக பகுதி பாசன விவசாயிக ளால் நடவு செய்த நெற்பயிர்கள் அறு வடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் ஆண்டுதோறும் இப்பகுதியில் அரசே நேரடியாக விவ சாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்து வருகிறது.  இந்த நிலையில் மேலூர் அருகே முக்கம்பட்டியில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் அறுவடை செய்த நெற் களை கொள்முதல் செய்யாமல் அதி காரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  பொதுமக்களின் புகாரையடுத்து செவ்வாயன்று வந்த அதிகாரிகள் நெல் அளவீடு கருவிக்கு மட்டும் பூஜை செய்துவிட்டு புதனன்று முதல் மையம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த னர். ஆனால், புதனன்று கொள்முதல் நிலையம் செயல்படுத்தவில்லை.  இதனால், முக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறு வடை செய்த 8 முதல் 10 ஏக்கர் பரப்ப ளவிலான நெல்மணிகள் மழை மற்றும் பனிபொழிவால் கொள்முதல் மையத் திலேயே முளைக்க துவங்கியதோடு, பூஞ்சாணம் தாக்கும் அவலமும் ஏற் பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  இதேபோல் மதுரை கிழக்கு தாலு காவிற்குட்பட்ட இலங்கிபட்டியிலும் நெல்லை கொள்முதல் செய்ய கால தாமதம் ஏற்படுவதாக அப்பகுதி விவ சாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக கொள்முதல் நிலையங்க ளில் எந்த ஒரு கணக்கும் இல்லாமல் மூட்டைக்கு ரூ.60 கூடுதலாக கேட்ப தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்ற னர்.  கடந்த வாரம் வியாழனன்று நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் விவசாயிகளிடமிருந்து காரண மின்றி பணம் வசூலிக்கக் கூடாது அப் படி வசூலித்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியிருந் தார்.  மேலும் இதுகுறித்து புகாரை தெரி விக்க புகார் மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்து இந்த புகார் நம்பர் வெளியிடப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மூட்டைக்கு ரூ.60 கொடுத்தால்தான் எடை வைக்கப்படும் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும் ஆன்லைன் பதிவு என்று ஒரு புதிய முறையில் விவசாயிகளிட மிருந்து நெல் கொள்முதல் செய்யப் படுகிறது ஆன்லைனில் பதிவு செய்து அந்த பதிவு கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் கொடுத்த பின்னர் விவசாயி களிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் முறை தற்போது நடை பெற்று வருகிறது. இதனால் நெல் மணி கள் கொள்முதல் நிலையங்களில் முளைக்கத் தொடங்கிவிட்டன.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆன்லைன் பதிவு மற்றும் காரணமின்றி மூட்டைக்கு ரூ.60 விவ சாயிகளிடம் இருந்து பணம் பறிப்பது போன்ற செயல்கள் நடப்பதை உடனடி யாக தடுக்க வேண்டும் என விவசாயி கள் மற்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் இந்த பிரச்சனையை தொட ரும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சேர்ந்து அந் தந்த கொள்முதல் நிலையங்கள் முன் பும் மற்றும் சாலை மறியல், சாலை களில் நெற்களை கொட்டி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். செய்தி, படங்கள்: பா.ரணதிவே