இராமநாதபுரம், நவ.19- இராமநாதபுரம் மாவட் டம், முதுகுளத்தூர் தாலுகா வில் உள்ள கீழத்தூவல், மேலத்தூவல், கிருஷ்ணா புரம், கே.ஆர்.பட்டணம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றுத் தண்ணீரை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பொது மக்கள், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தாசில்தார் மற்றும் பொ துப்பணித்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்திய தில், இந்த கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவ தற்கு நடவடிக்கை எடுக்கி றோம் என்று உறுதியளித்த னர். அதனை ஏற்காத போ ராட்டக்காரர்கள் இப்பொ ழுதே நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள், விவசா யத்தொழிலாளர் சங்கத்தி னர் நடத்திய போராட்டத் தால் கோரிக்கை வெற்றிய டைந்துள்ளது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.