தேனி, ஜன.22- திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் முதல்வர் தலையிடக் கோரி போடி, மதுரை, சாத்தூரில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம், திரு மண்டங்குடி திரு ஆரூரான் சர்க் கரை ஆலை, 2017 ஆம் ஆண்டு நஷ்ட கணக்கு காட்டி மூடப்பட் டது.அந்த நிறுவனம் விவசாயி களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை தராமலும், வங்கி களில் விவசாயிகளின் பெயரில் பெற்ற கடனை செலுத்தாமலும் இருந்தது. தற்போது அந்த சர்க்கரை ஆலையை வாங்கிய ‘கால்ஸ் டிஸ்லரீஸ். என்ற நிறுவனம் கரும்பு நிலுவை தொகையில் 57 சதவீதம் மட்டுமே தரமுடியும் ,பழைய நிர்வா கம் வாங்கிய கடனுக்கு பொறுப் பேற்க முடியாது என தெரிவித்தது. இந்நிலையில் விவசாயி களுக்கு ஆலை தர வேண்டிய கரும்பு பணப்பாக்கி முழுவதை யும் வட்டியுடன் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி விவ சாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .திரு ஆரூ ரான் சர்க்கரை ஆலை விவகா ரத்தில் தமிழக முதல்வர் தலை யிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போடியில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் போடி தாலுகா தலைவர் இ. மூக்கையா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் ,மாவட்டச் செயலாளர் டி. கண்ணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
சாத்தூர்
சாத்தூர் முக்குராந்தலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.மனோஷ்குமார் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்ட துணைத்தலை வர் கே.சுப்பராஜ் பேசினார். போராட்டத்தை ஆதரித்து விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், வாழ்க விவசாயிகள் சங்கத்தின் தென்மாவட்ட தலைவர் பி.எஸ். காளிராஜ் ஆகியோர் பேசினார். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வீ.முருகன் கண்டன உரையாற்றினார்.
மதுரை
மதுரை யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க கிழக்கு தாலுகா தலைவர் பி.தனசேகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் ஏ. வேல்பாண்டி, மாவட்டப் பொருளா ளர் வி.அடக்கிவீரணன், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச் சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார்.