மதுரை, மார்ச் 8- எண்ணெய் குழாய் பதிக்கும் பணி யில் நிலங்களுக்கான இழப்பீடு வழங்கு வதில் ஐஓசி பாரபட்சம் காட்டுவதாக் கூறும் விவசாயிகள் தாங்கள் காவல்துறையில் அளிக்கப்படும் புகாரால் அச்சமடைந் துள்ளனர். மதுரை கிழக்கு தாலுகா அயி லாங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது மாயாண்டிபட்டி. இங்கு விளை நிலங்கள் வழியாக ஐஓசி நிர்வாகம் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளையும் நியாயமான இழப்பீடு கேட்கும் விவசாயி களையும் காவல்துறை மூலம் அச்சு றுத்தும் நடவடிக்கையை ஐஒசி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்னை எண்ணூர்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணி யை மேற்கொண்டு வருகிறது. மதுரை கிழக்கு தாலுகா அயிலாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டிபட்டி கிராமத்தில் இரு போகவிளை நிலங்க ளில், குழாய் பதிப்பதற்கான பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேற்கொண்டு வருகிறது. நிலத்திற்கும் சாகுபடி செய்யும் பயிர் மற்றும் மரங்க ளுக்கு மிகக்குறைவான இழப்பீட்டை வழங்குகிறது. இதிலும் எந்த வரை யறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. போதுமான இழப்பீடு கேட்கும் விவ சாயிகளிடம் “இப்போது தரும் தொகை யைப் பெற்றுக்கொள்ளுங்கள். மற்றொரு தவணை இழப்பீடு தரப்படும்” எனக் கூறுகின்றனர். இழப்பீட்டு தொகையை வாங்க மறுக்கும் விவசாயிகள் காவல்துறை மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். நிலத்தை கொடுக்க மறுத்த விவசாயி ஒருவர் ஐஓசி நிர்வாகத்தின் மீது யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில புகாரளிக்க சென்றபோது காவல்துறை புகாரை ஏற்க மறுத்ததோடு, ஐஒசி பொறியாளர் விவசாயிகள் மீது புகார் அளித்துள்ளதாகக் கூறி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளார். சம்பவத்தன்று குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த முரு கேசன் என்ற விவசாயி மீது ஐஓசி பொறி யாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இழப்பீட்டில் பாரபட்சம் ஒரே கிராமத்தில் வரப்புக்கு வரப்பு இழப்பீட்டுத் தொகை மாறுபடுகிறது. ஒரு நிலத்திற்கு சென்ட் ஒன்றிற்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடும். மற்றொரு நிலத்திற்கு வெறும் ரூ.4,500 வழங்குவ தாகக் கூறுகின்றனர் விவசாயிகள். இதற்கிடையில் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் பலர், நிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொடியை நட்டு வைத்துள்ளனர். காவல்துறைக்கு “குழாய் பதிப்பது குறித்தோ, அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பது குறித்தோ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தப் பிரச்சனையில் என்ன நிலை எடுத்துள் ளன என்பது குறித்தோ, விவசாயிகளின் ஆதங்கம் குறித்தோ” முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காவல்துறை இதை சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக கருதாமல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே தீர்வாக அமையும்.