districts

img

நியாயவிலைக் கடைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

மதுரை, ஏப்.17- நியாயவிலைக் கடை களில் ஒரே நிர்வாகத்தின் கீழ்  கொண்டுவருவது தொடர் பாக அரசின் கொள்கை ரீதி யான அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக பணியா ளர்களின் நலனைக் கருத் திற்கொண்டு நிர்வாக ரீதி யான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன என்றார் என கூட்டுறவு, உண வுப் பொருள் வழங்கல் மற் றும் நுகர்வோர் பாதுகாப்புத்  துறை அரசு முதன்மைச் செய லாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன். மதுரை மாவட்டம், பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திங்க ளன்று  கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச்  செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்  ணன், மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர் முன்னிலை யில் பாண்டியன் சில்க்ஸ்-  சாரீஸ் புதிய விற்பனை நிலை யத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து  ஜெ.ராதா கிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 22 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கூட்டு றவுச் சங்கங்கள் செயல்பட்டு  வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் அடங்கும். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலை களிலான வங்கிகளில் கடந்த  நிதியாண்டில் மட்டும் ரூ.71  ஆயிரத்து 950 கோடி மதிப்பி லான வைப்புத்தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ரூ.64 ஆயிரத்து 140 கோடி மதிப்பில் 17 வித மான கடனுதவிகள் வழங் கப்பட்டுள்ளன.

17.43 லட்சம் விவசாயி களுக்கு ரூ. 13 ஆயிரத்து 443  கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிள், 1.59  லட்சம் ஆதிதிராவிடர் பய னாளிகளுக்கு ரூ.1 ஆயிரத்து  72 கோடி மதிப்பில் கடனு தவிகள், 2.86 லட்சம் கால்  நடை வளர்ப்பு விவசாயி களுக்கு ரூ.1 ஆயிரத்து 339  கோடி மதிப்பில் கடனுதவி கள் வழங்கப்பட்டுள்ளன. . தமிழகத்தில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடை கள் செயல்பட்டு வருகின் றன. அதில் 26,018 முழுநேரக்  கடைகளுகம், 9,923 பகுதி நேரக் கடைகளும் அடங்கும். புதிதாகக் கட்டப்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கழிப்பறைகளு டன் கட்டப்பட்டு வருகின்  றன. ஏற்கனவே செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடை களில் கழிப்பறைகள் அமைப் பது தொடர்பாக உரிய நட வடிக்கை மேற்கொள்ள அலு வலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய் யும் பணிகள் கூட்டுறவுத் துறையின் மூலம் மேற் கொள்ளப்படுகின்றன. தமிழ கத்தில் மொத்தம் 998 இடங்க ளில் நேரடி கொள்முதல் நிலை யங்கள் செயல்படுத்தப்பட்டு ரூ.6793.56 கோடி மதிப்பி லான வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட தன் மூலம் 4.15 லட்சம் விவ சாயிகள் பயனடைந்துள்ள னர்.  டெல்டா பகுதியிலுள்ள பத்து மாவட்டங்களில் அதி கக் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.  மேலும். நியாயவிலைக் கடைகளில் ஒரே நிர்வாகத் தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறி விப்பு உள்ளது. இது தொடர்  பாக பணியாளர்களின் நல னைக் கருத்திற்கொண்டு நிர்  வாக ரீதியான சாத்தியக் கூறு கள் ஆராயப்பட்டு வரு கின்றன.  கூட்டுறவுச் சங்கங்க ளில் மக்களுக்கு வழங்கப்  படும் பல்வேறு விதமான  சேவைகளை ஒருங்கி ணைத்து ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் பல்  நோக்கு சேவை மையங்க ளாக மேம்படுத்தும் வகை யில் பணிகள் மேற்கொள்ளப்  படுகின்றன என்றார்.