திருநெல்வேலி, மார்ச் 26- நெல்லை புத்தகத் திருவிழா வில் நரிக்குறவர் இன மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் புத்தகம் வாசித்தனர். பாளை. வ.உ.சி மைதானத்தில் புத்தகத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. ஞாயிறன்று முடிவடைய உள்ள நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று புத்தக அரங்கு களை பார்வையிட்டனர்.புத்தகத்திரு விழா தொடங்கிய நாளிலிருந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், கை வினை பொருள்கள் தயாரித்தல், புத்தக வெளியீடு, குறும்படங்கள் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது. சனிக் கிழமை நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் கல் வெட்டுகளைப் படிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள் கலந்துகொண்டு கல்வெட்டு வாசிப்பு செய்தனர்.தொடர்ந்து 24 மணி நேரமும் நடத்தப்படும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை நரிக்குறவ மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர்.வள்ளியூர் நேதாஜி அரசு பள்ளியை சேர்ந்த 14 நரிக் குறவர் இன மாணவ, மாணவி கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் புத்தக திருவிழா பற்றிய வாசகங்க ளை மழலைச் சொல்லால் விவரித்தனர். மேலும் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் வரும் நடிகர் சிவாஜி கணேசனின் வசனங்களை யும் அற்புதமாக பேசினர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து கைதட்டி ரசித்தனர்.மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் கை வினைப் பொருட்கள் கண்காட்சி அரங்கம் அங்கு வைக்கப்பட்டி ருந்தது. அதில் உள்ள பொருட்க ளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சனின்று மதியம் வரை சுமார் 50,000 பேர் இந்த புத்தக திருவிழாவை கண்டு களித்தனர்.